Skip to main content

ரவுடிகள் கத்தி அரிவாள்களுடன் மோதல்! நாட்டு வெடிகுண்டு வெடித்து காயம்! 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021
Rowdies clash with screaming scythes! Country bomb blast injures

 

கடலூர் அருகே ரவுடிகள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 3 பேர் பலத்தக் காயமடைந்தனர். புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் பிரபல ரவுடி தாடி அய்யனார் என்கிற ராஜதுரை (28) மற்றும் தமிழ்நாட்டுப் பகுதியான கடலூர் அருகே உள்ள கீழ் குமாரமங்கலத்தை அடுத்த செல்லஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவா (24). இவர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஒருவரிடம் ஒன்றாக செயல்பட்டுவந்த நிலையில், தேவா உறவினரை அய்யனார் தரப்பு தாக்கியதால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டு அடிக்கடி மோதலில் ஈடுபட்டுவந்துள்ளனர். இதனால் இரு கோஷ்டிகளாக செயல்பட்டனர். இந்த நிலையில், சமீபத்தில் புதுச்சேரி சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி அய்யனார் கோஷ்டி நேற்று (30.06.2021) வழக்கமாக மது அருந்தும் கடலூர் மாவட்ட எல்லையான மலட்டாறு பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்து.

 

அய்யனாரை தாக்க தேவா கோஷ்டி நாட்டு வெடிகுண்டு மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அய்யனார் மற்றும் அவரது கூட்டாளி வேல்முருகனை தேவா கோஷ்டி கத்தி மற்றும் அரிவாளால் வெட்டியுள்ளனர். பதிலுக்கு அய்யனார் கோஷ்டியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் நாட்டு வெடிகுண்டை எடுத்து தேவா வீச முற்பட்டபோது வெடிகுண்டு வெடித்ததில் தேவாவின் கை விரல் துண்டானது. படுகாயமடைந்த நிலையில் அவரது உறவினர் ஒருவர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால்  பாரிசங்கர் மற்றும் போலீசார் தமிழக பகுதியான கீழ்குமாரமங்கலம் பகுதிக்குச் சென்றனர்.

 

Rowdies clash with screaming scythes! Country bomb blast injures

 

அங்கு நாட்டு வெடிகுண்டுகள் சிதறிக்கிடந்தன. தமிழ்நாடு - புதுச்சேரி இரு மாநில எல்லைப் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரி போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டு அம்மாநில போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். விசாரணையில் ரவுடிகளுக்குள்ளான மோதல் என்பது தெரியவந்தது. இந்தநிலையில், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் கைவிரல் துண்டான தேவா மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மோதலில் காயமடைந்த அய்யனார், வேல்முருகன் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் குழு மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்து  தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகிறது.  

 

இந்த மோதலில் தொடர்புடைய பிரபல ரவுடி தாடி அய்யனார் மீது பல்வேறு கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்துவரும் நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்தார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி சிறையில் இருந்து வெளியில் வந்த இவர், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக தாடி அய்யனார் மற்றும் அவரது கோஷ்டிகள் தமிழ்நாட்டு எல்லைப் பகுதியான ரெட்டிச்சாவடி, கீழ்குமாரமங்கலம் பகுதியில் தங்கியிருந்துள்ளனர். இரு மாநில எல்லை கிராமங்களில் நடைபெற்ற இந்த வெடிகுண்டு வீச்சு மற்றும் கோஷ்டி மோதலையடுத்து எல்லைப்புற கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.