Skip to main content

அருண் ஜெட்லீக்கு ராகுல் காந்தி பதிலடி.. 

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

 

"மிஸ்டர் அருண் ஜெட்லீ, ரஃபேல் திருட்டிற்கு மீண்டும் தேசத்தின் கவனத்தை திருப்பியதற்கு நன்றி. ரஃபேல் குறித்து இருக்கும் சந்தேகங்களை எல்லோரும் அறிய பாராளுமன்ற கூட்டு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளலாமே? ஆனால், உங்கள் தலைவரோ அவ்வாறு செய்யாமல் அவரின் நண்பரை காப்பாற்றல்லவா பார்க்கிறார். 24 மணிநேரத்திற்குள் இதைப்பற்றி ஆலோசனை செய்துவிட்டு வாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்" என்று காங்கிரஸ் தலைவர் அருண் ஜெட்லீக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
 

இதற்கு முன்னதாக,அருண் ஜெட்லீ, ராகுல் காந்தி வைக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஒவ்வொரு முறை பேசும்போதும் ஒவ்வொரு விலை குறிப்பிடுகிறார். உண்மைக்கு ஒரு முகம்தான் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். தற்போது அதற்குத்தான் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.         

சார்ந்த செய்திகள்