Skip to main content

புதிய கல்விக்கொள்கை விவகாரம்... ஆளுநர்களுடன் பேசும் குடியரசு தலைவர்...

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

president meeting about nep

 

புதிய கல்வி கொள்கை தொடர்பாக வரும் ஏழாம் தேதி மாநில ஆளுநர்களுடன் குடியரசு தலைவர் ஆலோசனை நடத்த உள்ளார். 

 

கடந்த 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த சூழலில், கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் பெயரில், இந்திய கல்விக்கொள்கையை மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு. அதன்படி புதிய கல்விக் கொள்கை அறிவிப்புகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றன. அதேபோல பல்வேறு மாநிலங்களிலும் இந்த கல்விக்கொள்கையின் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக வரும் ஏழாம் தேதி மாநிலங்களின் ஆளுநர்களுடன் குடியரசுத்தலைவர் ஆலோசனை நடத்த உள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் ஆளுநர் என்பதால், அவர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஏழாம் தேதி நடைபெறும் இந்தக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்க உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை; மத்திய அமைச்சகம் திட்டவட்டம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Union Ministry Scheme for New Education Policy for Classes 3, 4, 5

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வந்தது. இந்த திட்டத்தை கடந்த கல்வி ஆண்டிலேயே, நாடு முழுவதும் அமல்படுத்தியது. ஆனால், இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில் 2024 - 2025ஆம் கல்வி ஆண்டு வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதால், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் சில பள்ளிகளில் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘3,4,5 ஆகிய வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

மேலும், பிரீ.கே.ஜி படிப்பில் சேர, மாணவர்களுக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எல்.கே.ஜி படிப்பிற்கு நான்கு வயதும், யு.கே.ஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு ரெடி

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

 Draft of State Education Policy ready

 

மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

580 பக்கங்கள் கொண்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரைவு தயாராக உள்ளதாக மாநில கல்விக் கொள்கை குழு தகவல் வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு மாநில கல்விக் கொள்கையை தயாரித்துள்ளது. நான்கு பேர் கொண்ட குழு மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 180 பக்கமுள்ள பரிந்துரைகள் மற்றும் 400 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குழப்பம் ஏற்படாமல் பரிந்துரைகளை சரியாக மொழிபெயர்க்கும் பணி நடந்து வருவதாக மாநில கல்விக் கொள்கை குழு தகவல் வெளியிட்டுள்ளது.