ஜனாதிபதி தலைமையில் கவர்னர்கள் மாநாடு
புதிய இந்தியா 2022 பற்றி ஆலோசனை நடத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கவர்னர்கள் மாநாடு இன்று முதல் 2 நாட்கள் டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை வகிக்கிறார். இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பேச உள்ளனர். புதிய இந்தியா 2022 என்ற கருத்து அடிப்படையில் இந்த மாநாடு நடக்கிறது.