Skip to main content

‘மோடி குறித்த பிரகாஷ்ராஜின் கருத்து முதிர்ச்சியற்றது!’- கர்நாடக பாஜக கருத்து

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
‘மோடி குறித்த பிரகாஷ்ராஜின் கருத்து முதிர்ச்சியற்றது!’- கர்நாடக பாஜக கருத்து

பிரதமர் மோடியின் மவுனம் என்னை அச்சுறுத்துவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்த கருத்து முதிர்ச்சியற்றது என கர்நாடக பாஜகவின் செய்தித்தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.



நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் கொண்டாடுபவர்கள் மோடியின் விசுவாசிகளாக இருக்கின்றனர். ஆனால், இந்திய பிரதமர் மோடி இந்த விஷயத்தில் வாய் திறக்கவில்லை. அவரது இந்த மவுனம் எனக்கு வலிமிகுந்த அச்சுறுத்தல்களைத் தருகிறது. அவர் என்னைவிட மிகப்பெரிய நடிகர் என தெரிவித்தார். இந்த செய்தி நாடுமுழுவதும் வைரலாக பரவியது.

இதுகுறித்து கர்நாடக மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் சுரேஷ்குமார், அவர் கூடியிருந்த கூட்டத்திடமிருந்து கைத்தட்டல்களைப் பெறுவதற்காக பேசியிருக்கிறார். அவரது இந்த பேச்சு அரசியல் முதிர்ச்சியற்றது. அரசியலில் செயல்பட வேண்டுமென்றால், அவர் தனது சொந்தக்கட்சியைத் தொடங்கிக்கொள்ளலாம். ஆனால், பிரதமர் குறித்து இப்படியெல்லாம் பேசக்கூடாது என கூறியுள்ளார்.

இதேசமயம், கர்நாடகாவின் டவுண்ஹால் பகுதியில் சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்