Skip to main content

"என்னைச் சந்தித்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்" - ரகுல் ப்ரீத் சிங்!

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

jkl

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 7 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகளவில் 7.78 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5.46 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17.11 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன்பாதிப்பு மிக அதிகமாக இருந்துவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராகக் குறையத் தொடங்கியுள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், குடியரசுத் துணைத் தலைவர் என்று அனைவரும் இந்த நோய்த் தாக்குதலுக்கு ஆளாகினர். இந்நிலையில், தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழில் என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறேன். தற்போது நலமாக இருக்கிறேன். நன்கு ஓய்வெடுக்க உள்ளேன். அதன்மூலம், விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியும். என்னைச் சந்தித்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்