Skip to main content

நள்ளிரவில் பேய் வேடம்; மந்திர எழுத்துக்கள் - அமானுஷ்ய பாட்டியின் வைரல் வீடியோ

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

Paranormal granny in ghostly guise; A viral video

 

'ப்ராங்க்' என்ற பெயரில் முன்பின் தெரியாதவர்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் நடந்து கொள்வது தொடர்பான வீடியோ காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அதேபோல் பேய்கள் போல வேடமிட்டு சாலையில் செல்வோரை நள்ளிரவில் அச்சுறுத்தும் ப்ராங்க் நிகழ்ச்சிகள் தொடர்பான வீடியோ காட்சிகளும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் பேய் போல வேடமிட்டு சுற்றித் திரிந்த பாட்டி ஒருவரை அந்தப் பகுதி மக்கள் காருடன் சிறை பிடித்து எச்சரிக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பேய் வேடமிட்டுக்கொண்டு பெண் ஒருவர் சுற்றி வருவதாகத் தகவல் பரவியது. இதை அறிந்த சிலர் காரில் வந்த அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்றனர். அப்பொழுது சுற்றி வளைத்துப் பிடித்ததில், அவர் ஒரு மூதாட்டி என்பது தெரியவந்தது. அவர் பேய் போன்ற அலங்காரத்துடன் வெள்ளை நிற ஆடையை உடுத்தியிருந்ததோடு, சடலங்களுக்கு முகத்தில் கட்டும் துணியைப் போல துணி ஒன்றையும் கட்டியிருந்தார். உடனே அந்த இளைஞர்கள் 'இப்படி சாலையில் செல்பவர்களை அச்சுறுத்தக் கூடாது. மீறி இதுபோல் மீண்டும் நடந்து கொண்டால் போலீஸாரிடம் சொல்லுவோம்' எனத் தெரிவித்தனர்.

 

அதற்கு அந்த பாட்டி, ‘எனக்கு போலீசார் மீது பயமில்லை. நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்' என அந்த இளைஞர்களைப் பதிலுக்கு எச்சரித்தார். அந்தப் பாட்டியினுடைய காரில் ஆங்காங்கே மந்திரச் சொற்கள் எழுதப்பட்டு ஒட்டப்பட்டு இருந்தது. தற்பொழுது பேய் வேடத்தில் பாட்டி இளைஞர்களிடம் நடத்தும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.