Skip to main content

மோடியுடன் இம்ரான்கான் கூட்டு என்கிறார் பாகிஸ்தான் மதகுரு!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் மோடி வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கூறினார். ஆனால், மோடி வெற்றிபெற்ற பிறகு காஷ்மீர் பிரச்சனை எப்படி தீர்த்திருக்கிறார் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இம்ரான் கான் அரசு பதவியில் நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை. முன்பு அவரை மக்கள் தேர்வு செய்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் இப்போது அவரை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்று பாகிஸ்தான் மதகுரு மவுலானா பஸ்லுர் ரஹ்மான் கூறினார்.

Pakistani cleric claims Imran Khan's partnership with Modi

 

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக ஜமாயத் உலமா இ இஸ்லாம் அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறுகிறது. தலைநகர் இஸ்லாமாபாதை ஸ்தம்பிக்கச் செய்த இந்த போராட்டம் பாகிஸ்தானையே ஸ்தம்பிக்கச் செய்யும் என்று மவுலானா எச்சரிக்கை விடுத்தார்.


பாகிஸ்தான் ராணுவத்தை நாங்கள் எங்கள் கவுரவமாக கருதுகிறோம். தேர்தல் முறைகேடுகள் தொடரும் நிலையை ராணுவம் தலையிட்டு தடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மத்தியில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. எல்லோரும் இணைந்தே போராடுகிறோம் என்றும் மவுலானா கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

இம்ரான்கானை ஒரு மணி நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டும்; உச்சநீதிமன்றம் உத்தரவு; பரபரப்பில் பாக்

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

Imran Khan to be produced in an hour; Supreme Court Order; Pak is in a frenzy

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் கடந்த 9 ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்கு ஆஜராக வந்தார். அப்போது உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் வைத்து இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

 

பாகிஸ்தான் ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் இம்ரான்கான் கைது செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்கு முன்பே, இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அப்போது நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அவரை கைது செய்யும் முடிவானது தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டு  இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்ட இம்ரான் கானை 8 நாட்கள் காவலில் வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இம்ரான்கான் கைதுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் நடந்தது. இதில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இம்ரான் கான் கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என்றும் அவரது ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தனர்.

 

இந்நிலையில் இம்ரான்கானை ஒரு மணி நேரத்தில் ஆஜர்படுத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த இம்ரான்கான் கைது செய்யப்பட்ட விதத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 

Next Story

முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு; பாகிஸ்தானில் தொடரும் போராட்டம்

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

Firing on former Prime Minister; Continued struggle in Pakistan

 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இம்ரான்கானின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது ஷபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவி வகிக்கிறார். அவருக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களை நடத்திவரும் இம்ரான்கான், உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

 

இந்நிலையில், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இம்ரான்கானின் கட்சி போராட்டம், பேரணி ஆகியவற்றைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. பேரணி வாயிலாக தங்கள் எதிர்ப்புகளை இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்தவர்கள் எழுப்பி வந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானின் வாஸிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நடத்திய பேரணியில் மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இம்ரான்கான் காயமடைந்துள்ளதாகவும், அதேபோல் அவரது கட்சியைச் சேர்ந்த ஏழு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில், இம்ரான்கானின் கார் மீது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை இம்ரான் ஆதரவாளர்கள் தாக்கும் காட்சி வெளியானது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். 

 

விசாரணையில், “இம்ரான்கான் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார். அதனால் அவரைக் கொல்ல முயற்சி செய்தோம். தனக்குப் பின்னால் யாரும் இல்லை” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

மேலும், இந்தத் தாக்குதலின் பின்னணியில் பிரதமர் உள்ளிட்டோர் இருப்பதாக இம்ரான்கான் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போராட்டத்தில் காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது. இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இம்ரான்கான் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆட்சிக்கு எதிராகத் தனது போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்தார்.

 

மறுபுறம் இம்ரான்கானின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனப் பாகிஸ்தான் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.