இனி ‘பப்’களுக்கு செல்பவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம்!
ஐதராபாத்தில் ‘பப்’களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதியளிக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் கலால்துறையில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர திரையிலகினர் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் விற்பனை இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதில் பல திரைப்பிரபலங்கள் விசாரணை வளையத்திற்குள் சிக்கினர். இதிலிருந்து போதைப்பொருள் புழக்கம் குறித்த தீவிர விசாரணையில் இறங்கிய மதுவிலக்கு மற்றும் கலால்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இதன்மூலம், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பப்களிலும் செல்ல ஆதார் அட்டை காண்பிப்பது அவசியமாகிறது. இதுமாதிரியான பப்களுக்கு செல்ல எந்தவிதமான அடையாள அட்டைகளை வேண்டுமானாலும் காண்பிக்கலாம். 21 வயது நிரம்பிய ஒருவர் மட்டுமே பப்களில் நுழையமுடியும் என்பதாலும், ஆதார் அட்டை அத்தியாவசியம் என்ற அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.