Skip to main content

தேர்தலுக்கு முன்பாக குண்டுவைத்து வேட்பாளர் படுகொலை!

Published on 19/02/2018 | Edited on 19/02/2018

தேர்தல் தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோனத்தன் சங்மா குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Jhon

 

மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் ஜோனத்தன் சங்மா. இவர் சமீபத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேகாலயா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வில்லியம் நகர் தொகுதியில் போட்டியிட இருந்தார்.

 

இவர் கிழக்கு காரோ மலைப்பகுதியில் நேற்று மாலை பிரச்சாரம் முடித்துவிட்டு திரும்பி வரும்போது, சமண்டா பகுதியில் குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஜோனத்தனின் பாதுகாப்பிற்காக உடனிருந்த இரண்டு பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர். 

 

Jhon
வாக்களர்களுக்கு கொலை மிரட்டல் அறிவிப்பு

 

இந்த சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு, காரோ மலைப்பகுதியில், ‘ஜோனத்தனுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது. அப்படி வாக்களிக்கும் ஒவ்வொருவரும் சுட்டுக் கொல்லப்படுவார்கள்’ என காரோ நேஷனல் லிபரேஷன் ஆர்மி என்ற அமைப்பின் சார்பில் சுவர் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

மேகாலயா, நாகாலாந்தில் ஆட்சி யாருக்கு? - விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

Voting for assembly election in Meghalaya Nagaland state is going on today

 

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுரா மாநிலத்திற்கு கடந்த 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், மீதமுள்ள மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளும், நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், பாஜக போன்ற முக்கியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதேபோன்று திரிபுரா தேர்தலில் பதிவான வாக்குகளும் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. 

 

 

Next Story

பிரதமரின் பிரச்சாரத்திற்கு அனுமதியில்லை; கூட்டணி கட்சியால் பாஜக அதிருப்தி 

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Prime Minister's campaign is not allowed; BJP is unhappy with the alliance in megalaya

 

மேகாலயாவில் வரும் 27 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 60 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டது மேகாலயா சட்டமன்றம். இதில், 2018 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களை பிடித்தது. என்றபோதும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை அமைக்க முடியவில்லை.  

 

அந்த தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 20 தொகுதிகளில் வென்றது. வலுவான கூட்டணி அமைத்ததால் அக்கட்சி ஆட்சியில் அமர்ந்தது. இந்த தேர்தலில் பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தாலும் கூட தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கூட்டணி கட்சியாக இருந்தாலும் பாஜகவுக்கும் முதல்வருக்கும் மோதல் போக்கு நீடித்ததால் இந்த தேர்தலில் பாஜக தனித்து களமிறங்குகிறது. இந்நிலையில் பாஜகவிற்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்.

 

இந்நிலையில் தற்போது மேகாலயாவில் பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் அந்த பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் துராவில் உள்ள பி.ஏ.சங்மா விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் பி.ஏ.சங்மா அரங்கில் பணிகள் நடைபெறுவதை காரணம் காட்டி பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி நடைபெறும் மேகாலயாவில் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக அம்மாநில அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர்.