Skip to main content

கடற்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து; 3 பேர் மாயம்!

Published on 03/09/2024 | Edited on 03/09/2024
Navy helicopter crash into sea in gujarat

குஜராத் மாநிலம், போர்பந்தர் கடற்கரையில் ஹரி லீலா என்ற மோட்டார் டேங்கரில் பணியாளர் ஒருவர் காயமடைந்திருந்தார். அவரை மீட்பதற்காக நேற்று (02-09-24) இரவு ஹெலிகாப்டர் ஒன்று அனுப்பப்பட்டது. 

இந்திய கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழு பயணித்த அந்த ஹெலிகாப்டர், அரபிக்கடலில் அவசரமாக தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பணியாளர்கள் 4 பேர் கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் சென்ற ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், கடலில் விழுந்து மாயமான 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்