Skip to main content

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம்!

Published on 25/12/2021 | Edited on 25/12/2021

 

Nationwide Christmas Celebration!

 

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டபோதும், பல இடங்களில் கரோனா கட்டுப்பாடுகளால் களையிழந்து காணப்பட்டது. 

 

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள பேராலயத்தில் நடந்த திருப்பலியில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிலைப் பார்வையிட்ட அவர், பிரார்த்தனையில் பங்கேற்றார். தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், மக்கள் வீடுகளிலேயே கொண்டாடினர். 

 

Nationwide Christmas Celebration!

 

நகரில் உள்ள பிரதான பேராலயங்களின் முன்பு குடும்பத்துடன் குவிந்து கிறிஸ்து பிறப்பை வரவேற்றனர். மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், 50% மக்கள் மட்டுமே பிரார்த்தனையில் கலந்துகொள்ள வேண்டும் என அம்மாநில அரசு கூறியிருந்தது. அதன்படி, மாஹிமில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மக்கள் பிரார்த்தனை செய்தனர். 

 

கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஆராதனைப் பாடி கிறிஸ்து பிறப்பை வரவேற்று அவர்கள் கொண்டாடினர். ஹிமாச்சல் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர். கேரளாவில் பேராலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புத்தாடை அணிந்து குடும்பத்துடன் சென்று சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.