Skip to main content

பிணவறைக்குள் ஒரு புத்தக காதலன்! அமைச்சரை வியக்கவைத்த மருத்துவ ஊழியர்

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

The morgue turned into a library! Congratulations to the Minister of Health!

 

இன்றைய இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் புத்தகம் வாசிக்கக் கூடிய பழக்கம் என்பது முற்றிலும் குறைந்துள்ளது. முழுமையான எழுத்தறிவு கொண்ட கேரளாவில் கூட புத்தகங்களை விட்டுட்டு செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள். இந்த நிலையில், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை அறையை நூலகமாக மாற்றியுள்ளார் அதன் ஊழியரான ஜெயக்குமார்.

 

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்குள்ள பிரேதப் பரிசோதனை அறையில் ஃபாரின்ஸிக் மருத்துவ அறிவியல் ஜுனியர் லேப் அலுவலராக, மணிகண்டேஸ்வரம் போற்றி கோணத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (53) பணிபுரிந்து வருகிறார். 4 அறைகளை கொண்ட அங்கு ஒரு அறையில் சுமார் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஜெயக்குமார் வாங்கி வைத்துள்ளார். 

 

விபத்தில் பலியானவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களின் பிணங்களை வைத்திருக்கும் இங்கு ஒரு மினி நூலகத்தை ஜெயக்குமார் உருவாக்கி வைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

The morgue turned into a library! Congratulations to the Minister of Health!

 

இது குறித்து நம்மிடம் பேசிய ஜெயக்குமார், “11ம் வகுப்பு படிக்கும் போதே புத்தகம் வாசிக்கும் எண்ணம் என்னை தூண்டியது. அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து வருகிறேன். ஒரு நிமிடம் கிடைத்தால் கூட அந்த நேரத்தை வீணடிக்காமல் 10 வரிகளாவது படித்து விடுவேன். இதனால் எப்போதும் என்னுடன் புத்தகம் இருந்து கொண்டே இருக்கும்.

 

அந்த பழக்கத்தில் தான், நான் வேலை செய்கிற பிணவறையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசிப்பதற்கு வசதியாக ஒன்றிரண்டு என வாங்கி தற்போது அது 100க்கும் மேற்பட்ட புத்தகங்களாக உள்ளன. நான் வாசிப்பதை பார்த்து, பல மருத்துவா்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டு அவர்களும் நேரம் கிடைக்கும் போது வந்து வாசிக்கிறார்கள். மேலும் என்னுடைய வீட்டில் 3500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன.

 

இதற்கு முன் கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் திருச்சூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் வேலை பார்த்த போது அங்கேயும் புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். இன்னும் திருமணம் செய்து கொள்ளாத எனக்கு புத்தகம் தான் மனைவி பிள்ளைகள் என நேசிக்கிறேன். என்னுடைய இறுதி மூச்சு விடும் வரை புத்தகங்களை வாசித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 1945-ல் வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் உள்ளூர் பரமேஸ்வரன் ஐயர் எழுதிய புத்தகம் முதல், தற்போதைய கேரளா அரசு செயலாளர் சிவசங்கர் (தங்கம் கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் கூட்டாளியாக இருந்தவர் என குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்) எழுதிய ‘அசுத்தா மாவு வெறும் ஒரு ஆண’ என்ற புத்தகம் வரை வாசித்து விட்டேன்.

 

இங்கு நான் புத்தகம் வைத்திருப்பதை அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி அங்கு வரும் போது நேரிடையாக வந்து பார்க்கிறேன் என்றார். இளைய தலைமுறையினரும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதை விட்டுட்டு, புத்தகம் வாசிப்பதில் கொஞ்சம் அக்கரையை செலுத்த வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வெறுப்புக்கு எதிராக வாக்களியுங்கள்” - பார்வதி வேண்டுகோள்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
actress parvathy request to voters for election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கர்நாடகாவில் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ், கன்னட நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். 

இதனிடையே மலையாள நடிகை பார்வதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவரது ஸ்டோரிசில், “வெறுப்புக்கு எதிராக. வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். உங்கள் சக மக்களை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்கும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். பொய்கள் மற்றும் கோழைத்தனத்திற்கு எதிராக, 'விகாஸ்' என்று முகமூடி அணிந்தவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்”  எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.