Skip to main content

“நிலவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும்” - இந்து மகாசபை தலைவர் சர்ச்சை கருத்து

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

"Moon should be declared as Hindu Rashtra" - Hindu Mahasabha leader's controversial opinion

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட்  23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது. பின்னர், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பெங்களூரில் உரையாற்றிய பிரதமர் மோடி, ரோவர் இறங்கிய புள்ளியை சிவசக்தி பாய்ன்ட் என அழைத்துப் பெயரிட்டார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்து மகாசபை தேசியத் தலைவர் சக்ரபாணி மகராஜ் என்பவர் புதியதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 

 

அகில இந்திய இந்து மகாசபை தேசியத் தலைவராக இருக்கும் சுவாமி சக்ரபாணி மகராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவையும், அதனுடன் சில கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் உள்ள கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஜிஹாதிகள் உரிமை கொண்டாடும் முன் நிலாவை இந்து ராஷ்டிரமாக அறிவித்து சிவசக்தி புள்ளியை தலைநகராக அறிவிக்க வேண்டும்” எனச் சொல்லியுள்ளார். 

 

"Moon should be declared as Hindu Rashtra" - Hindu Mahasabha leader's controversial opinion

 

ஞாயிற்றுக்கிழமையான ஆக. 27ம் தேதி அவரின் ட்விட்டர் பக்கத்தில், “சந்திரயான்-3 மிஷன் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, மற்ற சித்தாந்தங்கள், மதங்கள் அல்லது ஜிஹாதி பழக்கவழக்கம் கொண்ட நாடுகள் நிலவினை சொந்தம் கொண்டாடுவதற்கு முன், ‘இந்து ராஷ்டிரா’ என்று அறிவிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  

 

மேலும், “நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஐ.நா.வின் முயற்சியுடன் நிலவினை இந்து ராஷ்டிராவாக இந்தியா அறிவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சந்திரயான்-3 விண்கலம் இறங்கிய இடத்திற்கு சிவ் சக்தி புள்ளி எனப் பெயரிட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. சிவசக்தி புள்ளியை, ‘சிவசக்தி தாம்’ என்றும் அழைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். 

 

மேலும் சக்ரபாணி மகராஜ், “நிலவில் இந்து ராஷ்டிரம் அமைக்கப்பட்டு அதன் தலைநகராக சிவசக்தி புள்ளி உருவாக்கப்பட வேண்டும் என இந்து மகாசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சந்திரனில் காஸ்வா-இ-ஹிந்தை (மதக் கலவரங்களை) பிறர் மேற்கொள்ளாமல் இருக்க, நிலவினை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும். ஜிகாதி மனப்பான்மை கொண்ட எந்தவொரு நபரும் நிலவில் காலடி எடுத்து வைத்து தீவிரவாதம், அடிப்படைவாதம் அல்லது இஸ்லாமிய பயங்கரவாதத்தை பரப்புவதற்கு முன் இதனைச் செய்ய வேண்டும் என சர்ச்சையான வகையில் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்தச் சர்ச்சையான கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. 

 

அதேபோல், சக்ரபாணி மகராஜ், இந்து மதத்திலும் சிவ பெருமான் நெற்றியில் நிலவு இருந்துள்ளது. பண்டைய தொடர்பு நிலவினுடன் இருந்ததனால் அதனை சந்தா மாமா என்றும் அழைத்து வந்தோம். நிலவிற்கு பயணம் செய்ய வசதிகள் ஏற்பட்ட பின்னர், நிலவின் சிவசக்தி புள்ளியில் இந்து மகாசபாவால் சிவனுக்கும் சக்தி தேவிக்கும் ஒரு பெரிய கோவில் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.