Skip to main content

மகாராஷ்டிராவில் புதிய உச்சம் தொட்ட கரோனா... ஒரேநாளில் 67 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

ர

 

இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மஹாராஷ்ட்ராவில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மஹாராஷ்ட்ராவில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வந்தது. நேற்று (16.04.2021) 60,328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 67,729 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,66,326 ஆக அதிகரித்துள்ளது.

 

மொத்தம் 6,47,901 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 419 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 59,970 பேர் கரோனா தொற்றால் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 56,783 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,61,056 ஆக உயர்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்