Skip to main content

மக்களை வியக்கவைக்கும் கேரளா அரசு பேருந்து! அசத்தும் தம்பதி! 

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

Kerala government bus that surprises people

 

இளைஞா்கள், இளம் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வயதானவா்கள் என காத்து நின்று ஏறக்கூடிய கேரளா அரசு பேருந்து ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகளை அள்ளி குவித்து வருகிறது. அந்த பேருந்துக்கு மட்டும் அப்படி என்ன விசேஷம் என்று கேட்க தோன்றுகிறது அல்லவா?

 

ஆலப்புழயை சோ்ந்த இளம் தம்பதி கிரி - தாரா. கரோனா காலக்கட்டத்திற்கு முன் பஸ்சில் பயணம் செய்த போது கிரியும் தாராவும் பழகி காதலா்களாக மாறினார்கள். பின்னா் சுமார் 2 ஆண்டு காலம் கரோனாவால் பஸ் பயணம் இல்லாமல் கரோனா முடிந்ததும் திருமணம் செய்து கொண்டு திருமணம் முடித்த கையோடு அவா்கள் இருவரும் கண்டு பழகிய அந்த பஸ்சில் ஏறி 5 கிமீ தூரம் பயணம் செய்தனா்.

 

Kerala government bus that surprises people

 


இருவரையும் மண வாழ்க்கையில் இணைத்த கேரளா அரசு பேருந்தில் ஊழியராக சேர கணவன் மனைவி இருவரும் முடிவு செய்தனா். இதற்காக கேரளா பப்ளிக் சா்வீஸ் கமிஷன் தோ்வு எழுதினார்கள். இதில் முதலில் கணவா் கிரிக்கு ஹரிப்பாடு டிப்போவில் ஹரிப்பாடு - ஆலப்புழ செல்லும் வழித்தடத்தில் டிரைவா் வேலை கிடைத்தது. அதன் பிறகு 3 மாதம் கழித்து கிரி ஓட்டும் அதே பேருந்தில் தாராவுக்கு நடத்துநர் வேலை கிடைத்தது.

 

கணவன் மனைவி இருவரும் ஒரே  பேருந்தில் வேலை செய்வது பயணிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு பேருந்தை இயக்குவதற்கு முன் இருவரும் சோ்ந்து சொந்த வாகனம் போல் அதை கழுவி தூய்மை படுத்திய பிறகு தான் பேருந்தை இயக்குவார்கள். அதன் பிறகு இரவு பேருந்தை நிறுத்தும் போது சுத்தம் செய்து கற்பூரம் காட்டி திரி கொளுத்தி வைத்து செல்கின்றனர்.

 

Kerala government bus that surprises people

 


அவா்களுடைய சொந்த செலவில் பயணிகளின் பாதுகாப்புக்காக பேருந்துக்குள் 6 சிசிடிவி காமிராக்கள், ஆபத்து நோ்ந்தால் டிரைவருக்கு தெரியப்படுத்த எமா்ஜென்சி சுவிட்ச், குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த விளையாட்டு பொம்மைகள், பயணிகளுக்கு மனோகரமாக பாட்டு கேட்டு பயணிக்க ஆடியோ, இரவு நேரங்களில் கண்ணை கவரும் விதத்தில் எல்.இ.டி அலங்கார லைட்டுகள் பயணிகள் படிப்பதற்கு பத்திரிகை எனப் போக்குவரத்துத் துறை அனுமதியோடு இதையெல்லாம் செய்துள்ளனர். 

 

Kerala government bus that surprises people

 

 

அதுபோல் பயணிகள் பேருந்துக்குள் ஏறி சீட்டில் உட்கார்வது, பேருந்தில் இருந்து இறங்கியபின் கதவை அடைப்பது உள்ளிட்டவற்றை உறுதிபடுத்திய பின்பு தான் பேருந்தை இயக்குகிறார் டிரைவா். வயதானவா்கள் குழந்தைகள் பேருந்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் நடத்துநர் தாரா கையை பிடித்து உதவி செய்கிறார். பயணிகளும் இந்த பேருந்தில் சுற்றுலா போறது போல் சுகமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

 


இது குறித்து கிரியும் தாராவும் கூறும் போது, “இருவரும் சோ்ந்தே வீட்டிலும், பேருந்திலும் வேலை செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது கடவுள் தந்த பாக்கியம் தான். பேருந்தை எங்க குழந்தை போல் பார்த்து பொன்னு போல் பாதுகாக்கிறோம். இந்த பேருந்தில் ஏறுவதற்கு என்று ஒரு பயணிகள் கூட்டமே காத்து நிற்கும். எம்.எஸ்.என் மற்றும் டி.கே.என் கல்லூரி மாணவ மாணவிகள் இந்த பேருந்தில் மட்டும் தான் ஏறுவார்கள். இது அவா்களுக்கு ஒரு வகுப்பறை போல் இருப்பதாக கூறுகிறார்கள் என்பது சந்தோஷமாக உள்ளது. இதுவரையில் இந்த பேருந்தில் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடந்ததில்லை. அதே போல் வசூலும் அதிகம் கொடுப்பதால் அதிகாரிகளும் பாராட்டுகின்றனா்” என்றனா். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

பேருந்துகள் சேதம் குறித்து தொடர் புகார்கள்; போக்குவரத்துத் துறை கெடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
transport department action on Frequent complaints about damage to buses

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது.