Skip to main content

நான் முன்னேற இது தான் காரணம் - விராட் கோலி

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதி போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்து. இந்த தோல்வியால் முன்னாள் வீரர்கள் பல விமர்சனங்களை முன்வைத்தனர். அதே போல் இந்திய அணியில் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக இருந்தது என்றும் விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில் பிரபல  நாளிதழுக்கு அவர் அளித்த பெட்டியின் போது, இந்திய அணியில் இளம் வீர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடி வருகின்றனர்.
 

viratkohli



தற்போது வரும் இளம் வீரர்கள் போட்டியின் தன்மையை புரிந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். இது அணிக்கு மிக பலமாக இருப்பதாக உணர்கிறேன்.  மேலும் தங்கள் மீது அதிக நம்பிக்கையுடனும், ஒரு போட்டியில் செய்த தவறை அடுத்த போட்டியில் வராமலும் பார்த்துக்கொள்கிறார்கள். அதே போல் ஓய்வு அறையில் வீரர்களை திட்டும் பழக்கம் எனக்கு இல்லை. என் மீதான விமர்சனங்களே என்னைத் தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்