Skip to main content

டி- 20 கிரிக்கெட்-  இந்திய அணி அபார வெற்றி!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி- 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 


மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இந்திய அணிக்கு இடையேயான முதலாவது டி- 20 போட்டி ஹைராபாத்தில் நடந்தது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

india west indies t20 series match at hyderabad india has to win

 இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 94, கே.எல்.ராகுல் 62 ரன்கள் எடுத்தனர். அதேபோல் இந்திய அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 2, வாஷிங்டன் சுந்தர், சஹார், ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். மேலும் மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில்  ஹெட்மெயர் 56, லூயிஸ் 40, பொல்லார்ட் 37, கிங் 31 ரன்கள் சேர்த்தனர். 

 

சார்ந்த செய்திகள்