Skip to main content

ஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலைகள்! -‘முறையற்ற காதல்’ குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

Published on 28/10/2020 | Edited on 29/10/2020
INCIDENT IN TELUNGANA

 

தெலங்கானா மாநிலம் -  வாரங்கல் மாவட்டம் - கோரிகுண்டா கிராமத்தில் உள்ள சணல் தொழிற்சாலையில் உள்ள கிணற்றில், கடந்த மார்ச் மாதம் 9 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்,  பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மசூத்,  அவரது மனைவி நிஷா ஆகியோர்,   குடும்பத்தினருடன் கடந்த 20 ஆண்டுகளாக  வாரங்கல் - கீர்த்தி நகரில் உள்ள கோணிப்பை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அப்போது பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவருடன்,  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், நிஷாவின் உறவினர் ரபிகா என்பவர்,  மேற்குவங்கத்தில் இருந்து தனது 16 வயது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் பிழைப்பு தேடி அங்கு வந்தார்.

வாரங்கல்லில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த ரபிகா, சஞ்சய் குமாருக்கு சமையல் செய்து கொடுத்து,  அதற்கான பணத்தைப் பெற்று வந்தார். அவ்வாறு ஏற்பட்ட பழக்கம்,  நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், மூன்று பிள்ளைகளுடன் ரபிகா, சஞ்சய்குமாருடன் திருமணம் செய்துகொள்ளாமல், குடும்பம் நடத்தத் தொடங்கினார். இந்நிலையில்,  ரபிகாவின் வயதுக்கு வந்த மகளுடன் சஞ்சய்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கவனித்த ரபிகா, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, தற்பொழுது தனது மகளுடன் நெருங்கிப் பழகுவது முறையானது அல்ல என எச்சரித்துள்ளார்.

 

INCIDENT IN TELUNGANA


இதையடுத்து,  தனது காதலுக்கு இடையூறாக உள்ள ரபிகாவை கொலை செய்ய திட்டமிட்டான்.  கடந்த மார்ச் 7- ஆம் தேதி, ரபிகாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி,  மேற்கு வங்கத்திற்கு ரயிலில்  அழைத்துச் சென்ற சஞ்சய் குமார்,  மோரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, இரவில் ரபிகாவைத் தூங்கவைத்து, அதிகாலை 3 மணியளவில் ராஜமகேந்திரவரம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது,  ரபிகாவின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து,  ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டான். அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி, மற்றொரு ரயிலில் மீண்டும் வாரங்கல்லுக்கு வந்தான்.

இந்நிலையில் சஞ்சய்குமாரிடம்,  ரபீகா எங்கே என நிஷா கேட்டுள்ளார். இதற்கு சஞ்சய்குமார், பீகாரில் உள்ள தனது வீட்டிற்கு ரபிகாவை அனுப்பி வைத்திருப்பதாகக் கூறி சமாளித்துள்ளான். சஞ்சய்குமாரின் பேச்சில் நம்பிக்கை இல்லாமல்,  உண்மையைக் கூறாவிட்டால் போலீசில் புகார் அளிப்பேன் என நிஷா எச்சரித்துள்ளார்.இதனால்,  ரபிகாவை தான் அழைத்து சென்ற விவரம் தெரிந்த மசூத் - நிஷா குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரையும் மொத்தமாகக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளான்,  சஞ்சய்குமார். 

அதன்படி,  மசூதின் பெரிய மகனுக்கு மார்ச் 21-ல் பிறந்த நாள் பார்ட்டி நடத்தப்படுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு,  அதில் பங்கேற்பதற்காகச் சென்ற சஞ்சய்குமார், ஏற்கனவே திட்டமிட்டபடி,  தூக்க மாத்திரைகளைக் கையுடன் எடுத்துச்சென்று,  குளிர்பானத்தில் கலந்து அனைவருக்கும் கொடுத்துள்ளான்.  

 

INCIDENT IN TELUNGANA


பார்ட்டியில் அங்கு பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த மற்ற 3 இளைஞர்களும் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கும் தூக்க மருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கியுள்ளான்.இரவு 12.30 மணியளவில்,  அனைவரும் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த நிலையில், தனியாளாக ஒவ்வொரு நபரையும் கோணிப் பையில் வைத்துக் கட்டி,  அருகில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு,  சஞ்சய்குமார் கொலை செய்துள்ளான். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு,  சஞ்சய்குமாரை கைது செய்யப்பட்டான்.  மேலும்,  ரபிகா கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து,  தாடேப்பள்ளி ரயில்வே போலீசார்,  சஞ்சய்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

முறையற்ற ஒரு காதலுக்காக,  மொத்தமாக 10 பேர் உயிரை காவுவாங்கிய கொடூரன் சஞ்சய்குமாருக்கு, வாரங்கல் விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.