Skip to main content

மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட இளைஞர்!!  ஆந்திராவில் பரபரப்பு!!

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
andhra pradesh

 

 

மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கேள்விப்படும் பொழுதே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் இந்த நிகழ்வு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில் ராஜு என்ற இளைஞர் பையில் மனித தலை ஒன்றை எடுத்து செல்வதை அப்பகுதியில் உள்ள சுப்பிரமணியம் என்பவர் நோட்டமிட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இளைஞரான ராஜுவை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவரது வீட்டிற்கு சென்று பார்க்கையில், பையில் இருந்த மனித தலையை எடுத்து அடுப்பில் சுட்டு, பெண் ஒருவருடன் சாப்பிட முற்பட்டுள்ளார் ராஜு. இதைக்கண்டு அதிர்ந்த சுப்பிரமணியன் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்த போலீசார், ராஜூவை  கைது செய்தனர். ராஜுவுடன் இருந்த அந்த பெண் இடத்தை விட்டு தப்பித்து செல்ல, அந்த பெண் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ராஜுவின் தந்தை உயிரிழந்த நிலையில் அவரது தாயாரும் அவரை விட்டுச் சென்றுவிட்டார். இப்படிப்பட்ட நிலையில் ராஜூவின் நடவடிக்கைகளில் சில நாட்களாகவே மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி அவர் மயானத்துக்கு சென்று வருவார். ஆனால் இப்படி மனித தலையை சுட்டு சாப்பிடும் அளவிற்கு என்ன நடந்தது என தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

அதேபோல் கொண்டுவரப்பட்ட தலை மயானத்திலிருந்து எடுத்து எடுத்து வரப்பட்டதா அல்லது கொலை செய்யப்பட்டு தலை எடுத்து வரப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம்  ஆந்திராவில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.