Skip to main content

ஆடு, கோழி வெட்ட தடை... திரிபுரா உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

திரிபுரா மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை வெட்டுவதற்கு தடை விதித்து அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

அந்த மாநிலத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாதா திரிபுரேஸ்வரி கோவிலில் உள்ள சக்தி மடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆடு பலியிடப்படுவது வழக்கம். இதற்கான நிதியை மாநில அரசு அளித்து வருகிறது. இதனை எதிர்த்து சுபாஷ் பட்டாச்சார்ஜி என்ற வழக்கறிஞர், திரிபுரா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். 

Goat and Poultry Barriers    Tripura High Court Action


இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி அரிந்தம் லோத் ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது கோயிலில் விலங்குகளை பலியிடும் நடைமுறை சுதந்திரத்துக்கு முன்பிருந்தே  தொடர்ந்து வருகிறது. அந்த நடைமுறையை தற்போது நிறுத்தக்கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் தரப்பில் இந்து உணர்வை புண்படுத்தும் வகையில் தினந்தோறும் ஆடு பலி கொடுப்பது அமைந்திருப்பதாக வாதிட்டார்.


இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுபோன்ற செயல்களுக்கு அரசு பணம் கொடுக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. இது போன்ற செயல்களை அரசு தடுக்க வேண்டுமே தவிர உயிர் பலி கொடுக்க அனுமதி அளிக்கக்கூடாது. இனி திரிபுரா மாநிலத்தில் எந்த இந்து கோவில்களிலும் ஆடு, கோழி விலங்குகளை பலியிட தடை விதிக்கிறோம்.

Goat and Poultry Barriers    Tripura High Court Action


ஆடு மற்றும் கோழி கோவில்களுக்கு தத்துக்கொடுக்கலாமே தவிர, பலியிட அனுமதியில்லை. இந்த உத்தரவை மாநில அரசு கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் கோயில்களில் சிசிடிவி கேமரா வைத்து இதை கண்காணிக்க வேண்டும் என்றும், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இந்த நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.