Skip to main content

1 ரூபாய்க்கு 'லஞ்ச்! - கம்பீரின் அசத்தல் திட்டம்!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

1 rs canteen

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர். ஓய்வுக்குப் பிறகு பாஜகவில் சேர்ந்த இவர், தற்போது டெல்லியின் கிழக்கு மாநில எம்.பியாக இருந்து வருகிறார்.

 

கௌதம் கம்பீர், மக்கள் யாரும் வெறும் வயிற்றோடு உறங்கக் கூடாது என்ற நோக்கத்தில் தனது தொகுதி முழுவதும் குறைந்த விலையில் உணவு வழங்கும் 'மக்கள் உணவகத்தை' 10 இடங்களில் அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.

 

இந்தநிலையில், இன்று கிழக்குத் தொகுதியின் காந்தி நகர் பகுதியில், முதல் மக்கள் உணவகத்தை கௌதம் கம்பீர் திறந்து வைத்துள்ளார். இந்த உணவகம் வெறும் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் எனவும், அடுத்த மக்கள் உணவகம் மயூர் விஹார் மாவட்டத்தில் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் கிழக்கு டெல்லி பகுதியில் 5 முதல் 6 மக்கள் உணவகங்கள் திறக்கப்படும் எனவும் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

 

கெளதம் கம்பீர் அறக்கட்டளை மற்றும் நாடாளுமன்ற நிதி ஆகியவற்றின் மூலம் இந்த 'மக்கள் உணவகம்' நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்