Skip to main content

மருத்துவமனை வெளியேற்றியதால் பிறந்தவுடன் இறந்த குழந்தை

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

மத்திய பிரதேசத்தில் டின்டோரி மாவட்டத்தில் மருத்துவ நிர்வாகம் பிரசவம் பார்க்க மறுத்ததால் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியிலுள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

சமராவதி தேவி(24) எட்டு மாத கர்ப்பிணி. இவருக்கு கடந்த திங்கள் காலை மூன்று மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  . வலி அதிகமானதால் அங்கிருந்த செவிலியர்களிடம் தனக்கு பிரசவ வலி தாங்க முடியவில்லை, பிரசவம் பார்க்குமாறு கூறியுள்ளார். அவர்கள் இவரை கண்டுகொள்ளாததால் கோபமடைந்தவர் வலி தாங்கமுடியாமல் அவர்களை அறைந்துள்ளார்.

 forced   leave the hospital

இதனால் கோபமடைந்த செவிலியர்கள் அவரையும் உறவினரையும் வலுக்கட்டாயமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியுள்ளனர் . வீட்டிற்கு போகும் வழியில் மீண்டும் பிரசவ வலி எடுக்க ஓரிடத்தில் அமர்ந்து வலிபொறுக்காமல் கதறியுள்ளார்.  அவரின் உறவினர்கள் அங்குள்ள பெண்களின் உதவியை நாடியுள்ளனர் . உதவிக்கு வந்த பெண்கள்  திறந்தவெளியில் சுற்றிலும் புடவையை வைத்து மறைத்துக்கொண்டு பின் அவர்களே பிரசவம் பார்த்தனர்.

 forced   leave the hospital

சமராவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது, இதில் பரிதாபமான செய்தி என்னவென்றால் அந்த ஆண் குழந்தை இறந்து பிறந்தது. அதைப்பார்த்து தன் பிள்ளையை கையில் வைத்துக்கொண்டு கதறி அழுதார். சமராவதி இது குறித்து கூறியது." எனக்கு பிரசவ வலி ஏற்பட்டவுடன் என் உறவினர்கள் என்னை மருத்தவமனையில் சேர்த்தனர். அப்போது எனக்கு வலி அதிகமாக இருந்தது எனவே எனக்கு உடனடியாக பிரசவம் பார்க்கும்படி கூறினேன். ஆனால் என்னுடைய வலியை செவிலியர்கள் புரிந்துகொள்ளாமல் என்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர். அதனால்தான் தற்போது என் குழந்தை இறந்துவிட்டது" என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.