Skip to main content

இளம் வாக்காளர் எண்ணிக்கை 8.40 கோடி அதிகரிப்பு...! - தேர்தல் ஆணையம்

Published on 16/03/2019 | Edited on 16/03/2019


நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

 

youth voters

 

இதில் 18 முதல் 19 வயது உடைய வாக்களர்களின் எண்ணிக்கை 1.50 கோடி பேர் எனவும், இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 1.66 சதவீதம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்த புள்ளிவிவர பட்டியலில் அதிக இளம் வாக்களர்களை கொண்டு மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தில் 20.10 லட்சம் இளம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க இருக்கின்றனர். அடுத்ததாக உத்தரபிரதேசத்தில் 16.70 லட்சம் இளம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க இருக்கின்றனர். மூன்றாவது இடத்தில் மத்திய பிரதேசம் 13.60 லட்சம் இளம் வாக்காளர்களைக்கொண்டுள்ளது.



அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான் 12.80 லட்சம், மஹாராஷ்ட்ரா 11.90 லட்சம், தமிழ்நாடு 8.90 லட்சம், ஆந்திரா 5.30 லட்சம் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றது. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 8.40 கோடி அதிகரித்து உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; வாக்காளர்களின் எண்ணிக்கையை அறிவித்த தேர்தல் ஆணையம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
The Election Commission declared the number of voters for Lok Sabha elections

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த 6 ஆம் தேதி சென்னை வந்திருந்தனர். அதன்படி தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையிலான குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தை போலவே, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாடு முழுவதும் 96.88 கோடி பேர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

அதில், புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 2.63 கோடி உயர்ந்துள்ளது. புதிய வாக்காளர்களில் 1.41 கோடி பேர் பெண்கள் ஆவர். 17 வயது நிறைவடைந்த உடனேயே பதிவு செய்தவர்கள் 10.64 லட்சம் பேர் ஆவர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைவிட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகமாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மக்களவைத் தேர்தல்; கடந்தாண்டை விட அதிகரித்த வாக்காளர்கள்!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
There are 96 crore people who are eligible to vote in the Lok Sabha elections

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. 

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் 96 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மொத்த வாக்காளர்களில் முதல் தலைமுறை வாக்காளர்களான 18 வயது முதல் 19 வரை உள்ளவர்கள் 1.73 கோடி பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 96 கோடி பேரில் 47 கோடி பேர் பெண் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலின் போது இந்தியாவின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 91.20 கோடியாக இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் 96 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.