Skip to main content

கிரேன் சரிந்து விபத்து; 16 பேர் பலி

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

Crane collapse inciedent 16 people issue

 

பாலம் கட்டும் பணியின் போது கிரேன் சரிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் ஷாஹாபூரி என்ற இடத்தில் மும்பை - நாக்பூரை இணைக்கும் அதிவிரைவுச் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பணியின் போது கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று அதிகாலை கிரேன் இயந்திரம் சரிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்