Skip to main content

18 வயதுக்கு குறைந்தவர்கள் மீது கோவாக்சின் தடுப்பூசி சோதனை - டெல்லி எய்ம்ஸில் தொடக்கம்! 

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

covaxin

 

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியமும், இங்கிலாந்தும் 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஃபைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலையில் இந்தியா கோவாக்சின் தடுப்பூசிகளை 12-18 வயதானோர்  மீது பரிசோதிக்க தொடங்கியுள்ளது.

 

ஏற்கனவே பாட்னா எய்ம்ஸில், இந்த சோதனை தொடங்கி நடைபெற்ற நிலையில், இன்று டெல்லி எய்ம்ஸிலும் 12-18 வயதானோர் மீதான கோவாக்சின் சோதனை தொடங்கியுள்ளது. இதற்காக 12-18 வயதிற்குட்பட்ட 20-30 பேர் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனையும், அவர்களுக்கு கரோனாவிற்கெதிரான ஆன்டிபாடிகள் இல்லையென்பதை உறுதி செய்யும் சோதனையும் நடைபெற்றது.

 

எய்ம்ஸில் நடைபெறும் இந்த தடுப்பூசி சோதனைக்கு பொறுப்பளரான டாக்டர் சஞ்சய் ராய் இந்த சோதனை குறித்து பேசுகையில், "இந்த சோதனையில் 2 முதல் 18 வயதான 500 க்கும் மேற்பட்டார்கள் பங்குபெறுவர். இந்த சோதனை மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் 12-18  வயதானவர்கள் மீதும், பிறகு 6-12 வயதானவர்கள் மீதும், பின்னர் 2-6 வயதுள்ள குழந்தைகள் மீதும் கோவாக்சின் பரிசோதனை நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பரிசோதனைகள் 6-9 மாதங்கள் வரை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.