Skip to main content

கரோனா பரவலின் இரண்டாவது அலை! தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவது கவலையளிக்கிறது!- பிரதமர் மோடியின் ஆதங்கம்!

Published on 17/03/2021 | Edited on 17/03/2021

 

coronavirus pm narendra modi discussion with cms for today

 

தமிழகம், கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பரவல் திடீரென அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை சமீபத்தில் எச்சரிக்கை செய்திருந்தது. தமிழக சுகாதாரத்துறையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கரோனா அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்தியது.

 

இந்த நிலையில், மார்ச் 16- ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்திய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கரோனா பரவலைத் தடுப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருந்தார். இதனையடுத்து, அரசுத் தரப்பிலிருந்து பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் வகையில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ராஜீவ் ரஞ்சன். குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த நிலையில், மாநில முதல்வர்களுடன் கரோனா பரவல் தடுப்பு குறித்தும், தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது குறித்தும் வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக விவாதித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "உலகத்தில் பல நாடுகள் கரோனா பெருந்தொற்றின் பல்வேறு அலைகளைச் சந்தித்துள்ளன. நமது நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 96 சதவீத்த்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதனால் இறப்பு சதவிகிதம் பெருமளவு குறைந்திருந்தது. இந்தச் சூழலில், தற்போது திடீரென சில மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

 

coronavirus pm narendra modi discussion with cms for today

 

தேசம் முழுவதும் 70 மாவட்டங்களில் கரோனா பரவல் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்காவிட்டால் நாடு முழுவதும் வேகமாகப் பரவி விடும். அந்த வகையில் இந்தியாவில் இரண்டாவது அலை பரவுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. நகரங்களைப் போல கிராமங்களில் பரவுவது கவலையளிக்கிற விசயம். அதனால், எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். சில மாநிலங்களில் தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதாக வரும் தகவல்கள் கவலையளிப்பதாக இருக்கிறது.

 

தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கவனமாக இருப்பது அவசியம். ஆனால், பொதுமக்கள் இப்போது மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. முகக்கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளிக் கடைப்பிடிப்பதையும் முகக்கவசம் அணிவதையும் பொது ஜனங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். கரோனா பரவலை மக்களோடு இணைந்துதான் அரசாங்கத்தால் தடுக்க முடியும். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அதற்கான வழிமுறைகளைக் கையாளுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவில் 30 முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள்; தமிழ்நாடு முதல்வர்?

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

29 out of 30 chief ministers in India are crorepatis; Except one...

 

நாட்டில் உள்ள 30 மாநிலங்களில் 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் தற்போது குடியரசுத் தலைவரின் கீழ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் நாட்டில் உள்ள 30 மாநில முதலமைச்சர்களில் 29 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் எனத் தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிவித்துள்ளது.

 

இந்த அமைப்பு தேர்தலின் போது தற்போதைய முதலமைச்சர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்பட்டியலில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முதலிடத்தில் உள்ளார். இவரிடம் ரூ.510 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிவித்துள்ளது.

 

இரண்டாம் இடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் பெமாகாண்டு உள்ளார். இவருக்கு ரூ.163 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன்பட்நாயக் ரூ.63 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பவர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இவருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிவித்துள்ளது.

 

இந்த பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 14 ஆவது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ 8.88 கோடி எனத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

Next Story

பிப்ரவரி 14; “இந்தியா என்றும் மறக்காது” - பிரதமர் மோடி 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

pm modi  tweet about Pulwama incident

 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரைத் தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்கமாட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்வோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் இந்தியா மறக்காது. வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை  ஊக்குவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.