Skip to main content

இந்தியாவில் 55 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020
பர

 

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

 

இந்தியாவைப் பொறுத்தமட்டில் அதன் தாக்கம் என்பது மின்னல் வேகத்தில் உள்ளது. குறிப்பாக மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதன் பாதிப்பு என்பது மிக அதிகமாக இருந்து வருகின்றது. இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று காலை 54.87 லட்சத்தை கடந்ததுள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,87,581 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,96,399 பேர் நோய் தாக்குதலில் இருந்து மீண்டுள்ளனர். 89,909 பேர் இந்த நோய் தாக்குதல் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்