Skip to main content

'என்னடா முத்தமா கொடுக்குற...' வாயிலேயே ஒரே போடு போட்ட நாகப்பாம்பு... அலறி ஓடிய மக்கள்

Published on 01/10/2022 | Edited on 01/10/2022
Cobra attack.. viral video

 

நாகப் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற இளைஞரை பாம்பு கடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

 

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பத்திராவதியை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் ரோனி ஆகியோர் பாம்புகளை பிடித்து காட்டில் விடும் வேலையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பத்திராவதி பகுதியில் நாகப்பாம்பு ஒன்று திரிவதாக தகவல் வெளியாக அங்கு சென்ற அலெக்ஸ் மற்றும் ரோனியும் அந்த பாம்பை பிடித்துள்ளனர். அப்பொழுது அலெக்ஸ் நாகப்பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக நாகப்பாம்பு அலெக்ஸ் வாயில் கொத்தியுள்ளது. பின்னர் அந்த பாம்பை பிடித்த ரோனி அதனை காட்டில் விட்டார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அலெக்ஸ் மருத்துவ சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

 

சார்ந்த செய்திகள்