Published on 23/11/2018 | Edited on 23/11/2018

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள்(93), தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உடல்நலக் குறைவு(வயது முதிர்வு) காரணமாக நேற்று முன் நாள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.
தாயார் உயிரிழந்ததை தொடர்ந்து டெல்லியில் இருந்த முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி விரைந்து வந்தார்.