Skip to main content

நேஷனல் ஹெரால்ட் நாளேடு வழக்கு; சோனியா, ராகுல் ஆஜராக அமலாக்கப்பிரிவு சம்மன்! 

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

The case of the National Herald newspaper; Sonia, Rahul summoned by enforcement division

 

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக அசோசியேட்டடு ஜர்னல்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கினார். இதில் 5,000க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு மற்றும் சில பத்திரிகைகளும் வெளியாகின. இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போக, நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அந்த நாளேடு நிறுத்தப்பட்டது. அதன்பின் 2010ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்குகள் 50 லட்சம் ரூபாய்க்கு ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. 

 

அப்படி மாற்றப்பட்டபோது அதில் முறைகேடு நடந்துள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அந்த வழக்கில் நாளை ராகுல் காந்தியும், வரும் ஜூன் 8ஆம் தேதி சோனியா காந்தியும் நேரில் ஆஜராக சொல்லி அமலாக்கப்பிரிவு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்