Skip to main content

சபரிமலையில் பெண்கள் வழிபாடு! ஆதரவுக் குரல் எழுப்பும் பா.ஜ.க. எம்.பி.!

Published on 03/01/2019 | Edited on 03/01/2019

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரண்டு பெண்கள் நுழைந்து, வழிபட்டு வந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனை வாழ்த்தியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. ஒருவர்.
 

Udit

 

 

 

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், பெண்களை வழிபட அனுமதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இதனை அமல்படுத்த கேரளாவை ஆளும் சிபிஎம் அரசு முயற்சிசெய்து வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக பாஜகவினர் போராட்டம் நடத்துகின்றனர். இந்த விவகாரத்தில் எதிர்கட்சியான காங்கிரஸும் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதால், சபரிமலைக் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா பகுதி கடந்த சில மாதங்களாக பரபரப்பாகவே காணப்படுகிறது. 
 

 

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள், நேற்று அதிகாலை சபரிமலைக் கோவிலுக்குள் போலீசார் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனை வழிபட்டு வந்தனர். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும், பாஜகவினர் கேரளாவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். 
 

இதற்கிடையில் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. உதித் ராஜ், சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபட்டதை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர், இதனை நான் ஆதரிக்கிறேன். பெண்களிடம் இருந்துதான் மனிதன் பிறக்கிறான். அப்படி இருக்கையில், அவர்களை தூய்மையற்றவர்கள் என்று எப்படி சொல்லமுடியும்? எங்கும் வியாபித்திருக்கும் கடவுள் முன் நாம் ஒவ்வொருவருமே சமமானவர்கள்தான்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 

மேலும், பாரம்பரியத்தின் பெயரால் ஆன பழக்கவழக்கங்கள் தீங்கானவையாக இருந்தால், அவற்றை உடைத்தெறிய வேண்டும். சதி, குழந்தைத் திருமணம், கேரளாவில் மார்பக வரி போன்றவற்றை பாரம்பரியத்தைக் காரணம் காட்டித்தானே செய்தார்கள். அவை தீமை என்று அறிந்துதானே உடைத்தெறிந்தோம் எனவும் விளக்கமளித்துள்ளார்  
 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலின் வரிசையில் வீணா விஜயன்; கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்கு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kerala CM Pinarayi Vijayan daughter filed a case against the Enforcement Directorate

கேரள முதல்வர் பிணராய் விஜயன் மகள் வீணா விஜயன் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன் என்ற ஐடி நிறுவனத்தை நடத்திவருகிறார். கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி(சி.எம்.ஆர்.எல்) நிறுவனம் மூலம் வீணா விஜயனின் நிறுவனமான எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு  சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திலும், அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில்தான், சி.எம்.ஆர்.எல் நிறுவணம் வீணா விஜயனின்  ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’ நிறுவனத்திடம் சாப்ட்வேர் அப்டேட் செய்து தருவதற்காக தவணை தவணையாக ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’  நிறுவணம் எந்த விதமான சாப்ட்வேர் அப்டேட்டையும் செய்து கொடுக்கவில்லை என்பது வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணத்தில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சாப்ட்வேர் அப்டேட் செய்து கொடுக்கவில்லை என்றாலும், எதற்காக வீணா விஜயன் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுந்ததை தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டது

இதனிடையே இதுகுறித்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் அமலாக்கத்துறைக்கு கொடுத்த்தாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில் பிணராயி விஜயன் மகள் வீணா விஜயன் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கவே அமலாக்கத்துறையை ஏவி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் தற்போது, கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.