Skip to main content

ஆடை களைந்து போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி! அள்ளிச்சென்ற காக்கிகள்!

Published on 07/04/2018 | Edited on 07/04/2018
srireddy1

 

நடிகை ஸ்ரீரெட்டிக்கு துணிச்சல் ரொம்ப அதிகம்தான்! தெலுங்குத் திரையுலகத்தை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார் போல!

 

திரைக்குப் பின்னால், சினிமாக்காரர்களுக்கு ஒரு இருட்டு உலகம் இருப்பது அறிந்த ஒன்றுதான்! ஆனாலும், அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு யாரும் முன்வருவதில்லை. ஏனென்றால், கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறிவது போன்ற செயலில் யாரும் இறங்க மாட்டார்கள். விதிவிலக்காக, ஏதோ ஒரு பேட்டியில், யாராவது ஒரு சினிமா பிரபலம், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்தெல்லாம் பேசிவிடுவார். அல்லது, வலைத்தளங்களில் நடிகர், நடிகைகளின்  ஆபாச படங்களை,  சினிமா சம்பந்தப்பட்டவர்களே,  வேண்டுமென்று லீக் செய்துவிடுவர். இவையெல்லாம் அவ்வப்போது பரபரப்பு செய்தியாகி, பின்னர் அடங்கிவிடும். 

sexy lady

 

அந்த வகையில், இப்போது  சர்ச்சையைக் கிளப்பி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலக உள் விவகாரங்களை அம்பலப்படுத்துவேன் என்பதில் தீவிரம் காட்டுகிறார். இதன் உச்சக்கட்டமாக, ஹைதராபாத்தில் உள்ள மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன் எதிரில், அருவருப்பாக நடந்து பரபரப்பு உண்டாக்கியிருக்கிறார்.  

 

ஒரு சில தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே நடித்திருக்கும் ஸ்ரீரெட்டி, தெலுங்கு ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது குற்றம் சுமத்தி, பேட்டியளித்து வருகிறார். ஜாதி பிரச்சனை, பாலியல் தொல்லை என நடிகைகள் சந்தித்து வரும் கஷ்டங்களை அம்பலப்படுத்துகிறார். ஹீரோக்கள், தயாரிப்பாளர்களுக்கு புரோக்கர்களாகச் செயல்படுகின்றனர். தெலுங்கு நடிகைகளில் 90 சதவீதம் பேர் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகிவருகின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரின் பெயர்களை வெளியிடுவேன். மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டையைக்கூட எனக்குத் தர மறுக்கின்றனர் என்றெல்லாம் பேசி வந்த அவர், இன்று மதியம் 1 மணியளவில்,  ஹைதராபாத்தில் உள்ள மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் அலுவலகம் வந்தார். அவர் நடந்துவரும் காட்சியை வீடியோ எடுத்தார்கள் சேனல் வீடியோகிராபர்கள். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், துப்பட்டா, மேலாடை, பேன்ட் என ஒவ்வொன்றையும் கழற்றி எரிந்தார். கிட்டத்தட்ட, அரை நிர்வாண கோலத்துக்கு மாறி, அந்த அலுவலகத்துக்கு வெளியே தரையில் உட்கார்ந்து, தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். 

 

“ஒரு பெண்ணாகிய நான் இப்படி ஒரு போராட்டத்தில் ஈடுபடுகிறேன் என்றால், அதற்கு காரணம் மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்தான்.” என்று, தனது போராட்டத்துக்கு விளக்கம் வேறு தந்தார். பொது இடத்தில், நிர்வாணப் போராட்டம் நடத்த முயன்றதால், ஸ்ரீரெட்டியை ஜூப்ளிஹில்ஸ் போலீசார் கைது செய்தனர். 

 

முள்ளை முள்ளால் எடுக்கும் ‘டெக்னிக்’ இதுதானோ?

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

புடவைகளை விற்று உதவி செய்த பிரபல நடிகை

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
navya nair helped charity people with his saree sold

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான புடைவைகள் இருப்பதாகவும் நியாயமான விலையில் அவை கிடைக்குமெனவும் கூறியிருந்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

navya nair helped charity people with his saree sold

இதையடுத்து நவ்யா நாயர் விற்பனையை தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த லாபத்தை கேரள பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்து அருகில் இருக்கும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் கொடுத்துள்ளார். இவரது செயல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.