டீக்கடையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒட்டுமொத்த டீக்கடையும் கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அமைந்துள்ள முதலக்குளம் பகுதியின் முக்கிய சாலை பகுதியிலேயே உள்ள டீக்கடை ஒன்றில் கடையின் உரிமையாளர் வழக்கம்போல இன்று கடையைத் திறந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென கடையில் தீப்பற்றியதோடு சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் டீ குடிக்க வந்தவர்கள் என அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பி வெளியே ஓடி வந்தனர். தற்போது இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பற்றி எரிந்த டீக்கடை; சிட்டாய்த் தப்பிய ஊழியர்கள்
சார்ந்த செய்திகள்
Next Story
‘மூளையைத் தின்னும் அமீபா’ - வழிகாட்டுதல்கள் வெளியீடு!
அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்ற மூளையைத் தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதில், “தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவிற்கு மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “ கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும். அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளைத் தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தைச் செலுத்துமாறு இந்த தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
Next Story
செப்டிக் டேங்கில் பெண்ணின் எலும்புக்கூடு; 15 ஆண்டுகளுக்குப் பின் வெளியான அதிர்ச்சி!
மனைவி காணாமல் போனதாக வெளியான சம்பவத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின்பு செப்டிக் டேங்கில் இருந்து மனைவியின் உடல் எலும்பு கூடாக கைப்பற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த அனில் குமார் என்பவர் கலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு கலா திடீரென காணாமல் போனதாக கணவர் அனில் குமார் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது அணில் குமார் இஸ்ரேலில் வேலை பார்த்து வருகிறார். கேரளாவில் அவருடைய பழைய வீடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு காணாமல் போன கலா உண்மையிலேயே காணாமல் போகவில்லை கணவன் அனில் குமாரால் கொலை செய்யப்பட்டு வீட்டின் செப்டிக் டேங்கில் போடப்பட்டுள்ளார் எனப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் சீரமைப்பு செய்துவரும் அனில் குமாரின் வீட்டின் செப்டிக் டேங்கில் சோதனையிட்டதில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் எலும்புக்கூடு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அனில் குமாரை இஸ்ரேலில் இருந்து கேரளா கொண்டு வர முயற்சிகள் எடுத்து வருவதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு செப்டிக் டேங்கில் வீசப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் துப்பறிந்து கண்டறிந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.