Skip to main content

வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் 89 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் லீக்!

Published on 26/04/2018 | Edited on 26/04/2018

89 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, அதைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழ் வேலைபெற்ற 89 லட்சம் பேரின் ஆதார் எண்கள் பொதுவெளியில் அனைவரும் பயன்படுத்தும் நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்தத் திட்டத்தின் கீழ் வருமானம் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறும் 89 லட்சம் பேரின் மாநிலம், பெயர், கிராமம், ஊழியர் எண் மற்றும் ஆதார் எண்கள் பாதுகாப்பற்ற நிலையில் ஆந்திர மாநில அரசு இணையதளப் பக்கத்தில் இருந்துள்ளது. மொத்த பயனாளிகள் 1.02 கோடி பேரில் இந்த 89 லட்சம் பேர் தங்கள் அடையாள அட்டைகளோடு ஆதார் எண்ணை இணைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக இணையதளப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கோடாலி ஸ்ரீனிவாசன் அளித்த புகாரின் பேரில், தொழில்நுட்பத் தவறுகள் சரிசெய்யப்பட்டு, பொதுமக்களின் விவரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால், வீட்டுவசதி கார்ப்பரேசனின் பக்கத்தில் இன்னமும் 44 லட்சம் பேரின் ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் கிடைப்பதாக ஸ்ரீனிவாசன் குறிப்பிடுகிறார். 

 

பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்கள் காக்கப்பட வேண்டும். அரசு வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் எல்லா விவரங்களையும் இப்படி வெளியிடுகிறது. ஆனால், அவற்றை அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என்பதால் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது என ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

 

ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!


தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் பூத் அளவிலான வாக்காளர்களுக்கு பாஜக வாட்ஸ்-அப் குழுவில் இணையுமாறு இணைப்புடன் (லிங்) குறுஞ்செய்திகள் வருவதாகக் கூறியுள்ளார்.


மேலும் அவர், ஆதார் அட்டையில் அளிக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணில் மட்டுமே அவ்வாறான குறுஞ்செய்திகள் வருவதாகவும், மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆதார் தகவல்களைத் திருடியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் புகார் மிகத் தீவிரமானது எனக் கூறி, இதுகுறித்து விசாரித்து வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

 

 

 

Next Story

”தனிநபர் உரிமைகளை மறுக்கக்கூடாது” -ஆதார் வழக்கில் நீதிபதி

Published on 26/09/2018 | Edited on 26/09/2018
adhar


”வங்கி கணக்குகளுக்கும், மொபைல் இணைப்பு சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் இல்லை. தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம். தனிநபர் கண்ணியம் காக்க ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும். குறைந்த, அத்தியாவசிய தகவல்களே ஆதாருக்காகப் பெறப்படுகிறது.ஆதார் எண்னை போலியாக உருவாக்க முடியாது.நீட்,சிபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கூடாது. பான் கார்டுக்கு ஆதார் கார்ட் அவசியம். பள்ளிச் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயம கிடையாது. ஆதாருக்காகப் பெறப்படும் தகவல்கள் குறைவு, நன்மைகள் அதிகம்” என்று நீதிபதி ஏ.கே சிக்ரி தெரிவித்தார்.
 

அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் மறுக்கப்பட கூடது, அதேபோல, யாருக்கும் அரசின் சலுகைகளும் மறுக்கப்படக் கூடாது என்று தீபக் மிஸ்ரா தலைமையில் அடங்கிய ஐந்து பேர் கொண்ட நீதிபதிகளின் அமர்வு தெரிவித்துள்ளது.