Skip to main content

வருகிறது பெண்கள் மனிதச்சுவர் போராட்டம்- திணரும் கேரள அரசு

Published on 30/12/2018 | Edited on 30/12/2018
s

 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கடுமையான பிரயாசைகளை மேற்கொள்கிறார் முதல்வர் பினராய் விஜயன். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாகவே மீறும் பரிவார் அமைப்புகள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என கடும் ஆட்சேபம் செய்வதோடு, ஆர்ப்பாட்டம் , போராட்டங்கள் நடத்தியதில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவல் துறை தடியடிப் போராட்டம் நடத்தியதில் தனியார் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தன.

 

s

 

ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஐந்தாயிரம் பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். வெளியே வர ஜாமீன் கிடைக்க முடியாத பிரிவில் ஜெயிலில் இருப்பவர்களின் எண்ணிக்கை 256.

ஆனால், சபரிமலை சன்னிதானத்திற்குள் போலீசாரின் நடவடிக்கை காரணமாக கலவரம் ஏற்படக் கூடாது. மோதலில் எந்த ஒரு உயிரிழப்பும் கூடாது அப்படி நடந்தால் விவகாரம் திசை திருப்பப்பட்டு ஆகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து விடும் என்பதால் அதற்கு இடமளிக்காமல் கவனமாகச் செயல்படுகிறார் முதல்வர் பினராய் விஜயன் என்கிறார்கள். அதற்கு ஏற்ப சபரிமலை செல்வதற்கு வருகிற இளம் பெண்களை பாதுகாப்புடன் ஆலயம் கொண்டு செல்கின்றனர். அது சமயம் சன்னிதானத்திலிருக்கும் அமைப்புகள் அவர்களை மேலே செல்லவிடாமல் கடுமையாக தடுக்கிறார்கள். அவர்களை எதிர்த்து மேல் நடவடிக்கையை மேற்கொள்ளாமல் காரணத்தைத் தெரியப்படுத்தி பெண்களைத் திருப்பி அனுப்பிவிடுகிறது போலீஸ். இதன் காரணமாக அங்கு பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

 

s

 

இதற்கிடையே தங்களின் எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தவும் பெண்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நேற்றைய தினம் கேரளாவில் இந்து அமைப்புகள் பெண்களடங்கிய ஜோதி போராட்டத்தை நடத்தினார்கள். இந்தப் போராட்டம் கேரளா, குமரி, பெங்களூரூ, டெல்லி கோன்ற நகரங்களிலும் நடந்தது.

 

s

 

இதற்கு பதிலடியாக பினராய் விஜயனின் சி.பி.எம். அரசு, பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வலியுறுத்தி இந்து மதத்தைச் சேர்ந்த சாதி மற்றும் சமுதாய அமைப்பினரைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். கூட்டத்தில் பெண்கள் விழிப்புணர்வு பொருட்டு ஜனவரி 1ம் தேதி பெண்கள் மனிதச்சுவர் போராட்டத்தை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாயர் சமூகத்தின் என்.எஸ்.எஸ். அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

 

s

 

கேரள அரசின் போர்வையில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்துகிறது என குற்றம் சாட்டுகிறது. அதற்கு அரசுப் பணம் செலவிடப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்து நீதிமன்றம் வரை செல்ல பினராய் விஜயனோ அரசுப் பணம் செலவிடப்படவில்லை என் விளக்கம் அளித்துள்ளார். அரசு ஆதரவோடு நடத்தப்படும் பெண்களை மட்டுமே கொண்ட இந்த மனிதச்சுவர் போராட்டம் மிகப் பெரியதாக இருக்கும். வரலாற்றுப் பதிவாகிப் பேச்சாகிவிடும் என்ற காரணத்தால், சபரிமலைப் போராட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

 

s

 

காரணம்,  பல ஆண்டுகட்கு முன்பு இந்தியாவிலேயே வேறு எங்கும் காணப்படாத அளவில் கேரளாவில் மிக நீண்ட 650 கி.மீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலிப் போராட்டத்தை கேரளாவின் வட எல்லையான காசர் கோட்டிலிருந்து திருவனந்தபுரம் பாறசாலை வரை வெற்றியுடன் நடத்திக் காட்டினர் மார்க்சிஸ்ட் கட்சியினர். அதில் பல லட்சம் பேர்கள் கலந்து கொண்டார்கள். இது போன்று வேறு எந்தக் கட்சியும் நடத்தவில்லை.

 

இந்த விஷயம் தான் சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்காரர்களை பதற்றத்திற்குள் கொண்டு சென்றிருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம்; கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
Sabarimala crowd issue; High Court orders action to Kerala Govt

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்தக் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த சூழலில், சபரிமலையில் இந்த ஆண்டுக்கான, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சபரிமலை நிர்வாகம் இது தொடர்பாக பக்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

வழக்கமாக டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கு மேல் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம், இந்த ஆண்டு பூஜைக் காலத்தின் ஆரம்பத்திலேயே மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது.  இருப்பினும் சபரிமலை மகர விளக்கு பூஜையை ஒட்டி பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சபரிமலை தரிசனத்திற்கு ஏற்கனவே ஆன்லைன் மூலம் 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.  நேரடி முன்பதிவுக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்றும்,  இது வழக்கமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக 20 ஆயிரம் பக்தர்கள் அதிகமாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும் வழித்தடத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் குறைகளை சரி செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் போலீஸ் டிஜிபி தலையிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கோஷத்தை மாற்றிய ஐயப்ப பக்தர்கள்; பரபரப்பை பற்ற வைத்த இரவு நேரம் - கோவையில் பரபரப்பு

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
Propaganda by Tamil Nadu Police who stopped Ayyappa followers in Coimbatore

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்தக் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், சபரிமலையில் இந்த ஆண்டுக்கான, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சபரிமலை நிர்வாகம் இது தொடர்பாக பக்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். வழக்கமாக டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கு மேல் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம், இந்த ஆண்டு பூஜைக் காலத்தின் ஆரம்பத்திலேயே மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையில், கடந்த 12 ஆம் தேதி காலை 6 மணியளவில் ஆந்திராவில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்லும்போது, திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுள்ளனர். உள்ளே சென்ற ஐயப்ப பக்தர்கள், கோவிலின் மூலஸ்தானம் அருகே சென்று கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டுள்ளனர். அப்போது, உள்ளே இருந்த ஊழியர்கள் சிலர், அவர்களை வேகமாக நகர்ந்து செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால், ஐயப்ப பக்தர்களோ பக்தி மிகுதியால் விலகிச் செல்லாமல், அங்கேயே நின்றதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கோவில் பணியாளர்கள் ஐயப்ப பக்தர்கள் மீது கைவைத்து தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டுள்ளனர். உடனே அவர்களை கோவில் ஊழியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு சில நிமிடங்களிலேயே முற்றியுள்ளது. அப்போது, ஐயப்ப பக்தர்கள் சார்பில் பேசிக்கொண்டிருந்த சென்னா ராவை கோவில் பாதுகாவலர்கள், மேலே கைவைத்து தள்ளியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஐயப்ப பக்தர் சென்னா ராவ், தங்களை ஏன் தள்ளுகின்றீர்கள் என சத்தமிட்டு கேட்டுள்ளார். உடனே மேலும் ஆத்திரமடைந்த கோவில் பாதுகாவலர்கள் ஒன்று திரண்டு ஐயப்ப பக்தர்களை தாக்கியுள்ளனர். கோவிலுக்குள் இந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத ஐயப்ப பக்தர்களும் பதிலுக்கு தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னரும் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி தந்துள்ளது. அதன் பின்னர், இந்த பிரச்சினை காவல் நிலையம் வரை சென்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது ஒருபுறமிருக்க, அதே தினத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலையை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது கோவையில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் எரிமேடு சாலையில் சென்றபோது அவர்களை சபரிமலைக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஐயப்ப பக்தர்கள் காவல்துறையினருக்கு எதிராகவும், முதல்வருக்கு எதிராகவும் முழக்கமிட்டுள்ளனர். இதன் காரணமாக, அந்த இடத்தில் திடீர் பரபப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால், ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு கருதியே அந்த நேரத்தில் தடுத்து நிறுத்தியதாக போலீஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியிருந்தது. சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக செல்லும் ஐயப்ப பக்தர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.