Skip to main content

சத்தியம், சத்தியம் நான்... -பொன். மாணிக்கவேல்

Published on 30/11/2018 | Edited on 30/11/2018



ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும், ஒவ்வொரு எஸ்.ஐ.-யும், ஒவ்வொரு கான்ஸ்டபிளையும் யோசித்து நடத்தவேண்டும். ஏனென்றால் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறது. என்ன பாதிப்புகள் ஏற்பட்டாலும் அப்படியே அது அந்த குடும்பத்தை பாதிக்கிறது. சிலருக்கு மிகுந்த மனக்கவலைகளெல்லாம் உண்டாகிறது. சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்யுங்கள். ஏனென்றால் அவர்கள் சட்டத்தின் பணியாளர்களே தவிர, உயர் அதிகாரிகளின் பணியாளர்கள் அல்ல. அதிகாரிகளின் அறிவுரைகளை கேட்கவேண்டும் ஆனால் அது சட்டத்திற்குட்பட்டதாக இருக்கவேண்டும். அப்படி அது சட்டத்திற்குட்பட்டு இருந்ததென்றால் வேலையை முடித்துவிட்டு பேசாமல் போய்விடவேண்டும்.  

 

ஒரு நாளில் ரயில் பாதையில் 10 பேர் இறக்கின்றனர், ஒரு வருடத்திற்கு 3600 பேர் இறக்கின்றனர். இதனால் ரயில் என்ஜினுக்குமுன் அதிக செயல்திறன்கொண்ட கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இறப்புகளில் 4 கொலையாக இருந்தாலும் அது கவனிக்கப்பட வேண்டியதுதான். நாங்கள் அனைத்து வழக்குகளையும் 174 ஆகதான் பதிவு செய்கின்றோம். சத்தியமா, சத்தியமா முழுமனதோடு ஓய்வு பெறுகிறேன். உங்கள் ஒத்துழைப்புடன் நான் முழுமனதுடன் ஓய்வு பெறுகிறேன். எனக்கு அதிகாரிகளால் மட்டுமே பிரச்சனையே தவிர அரசாலோ, அரசியல்வாதிகளாலோ எந்த பிரச்சனையும் இல்லை. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எதற்கெடுத்தாலும் அரசியல் கட்சிகள் அர்ச்சகர்கள் குரவளையையே பிடிக்கின்றன'-பொன்.மாணிக்கவேல் பேட்டி   

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

'No matter what, the political parties are holding the priests' - Pon.Manikavel interview

 

ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில் நாடு முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்தநிலையில் அங்கு உயிரிழந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்று சொன்னார்கள். ஏற்றி விட்டோம். அதற்காக இன்று ஒன் ஹவர் ஆகிவிட்டது. மொத்தத்தில் கோவிலில் இருக்கக்கூடியவர்களை இரண்டு ஸ்டாப்பாக பிரிக்க வேண்டும். ஒன்று அறநிலை துறை அதிகாரிகள். இன்னொருவர்கள் கோவிலில் உள்ள ஸ்டாப். இவர்களை அறநிலையத்துறை அதிகாரிகள் என டிபார்ட்மெண்ட் ஏற்றுக் கொள்வதில்லை.

 

இதை யாரும் கவனிக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இதனை கவனிக்க வேண்டும். முக்கியமாக அரசியல் கட்சிகள் எதற்கெடுத்தாலும் கோவிலில் உள்ள அர்ச்சகர்களின் குரல்வளையை பிடிக்கிறார்கள். நல்லா புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வேற, அவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் இல்லை. மணியடிப்பவர்கள், மெய்க்காப்பாளர்கள், வாட்ச்மேன், கணக்குப்பிள்ளை, கோவில் சூப்பிரண்ட் என்று இருப்பார்கள். இவர்கள் யாரையும் டெம்பிள் ஸ்டாப்பாக எடுத்துக் கொள்வதில்லை'' என்றார்.

 

 

Next Story

அட்டகாசமான ட்ரைலருடன் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட 'பொன் மாணிக்கவேல்' படக்குழு!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

prabhu deva's pon manikkavel movie release date announced

 

இயக்குநர் ஏ.சி. முகில் இயக்கும் 'பொன் மாணிக்கவேல்' படத்தில் பிரபு தேவா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். சுரேஷ் சந்திர மேனன், பிரபாகர், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபு தேவாவின் 50வது படமாக உருவாகும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில், அட்டகாசமான ட்ரைலருடன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், "பொன் மாணிக்கவேல் திரைப்படம் வரும் நவம்பர் 19ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.