Skip to main content

திமுக தொண்டர்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள்!

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
poli


சென்னை காவேரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என காவல்துறையினர் திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கலைஞரின் உடல்நிலையில் நேற்று இரவு திடீரென பின்னடைவு ஏற்பட்டதாகவும், பின்னர் சீரடைந்ததாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனால், காவேரி மருத்துவமனை முன்பு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் கலைந்து செல்லாமல் இருந்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அனைவரும் புறப்பட்டு சென்றனர். இருப்பினும் மருத்துவமனை முன்பு கூடியிருந்த தொண்டர்கள் இரவு முழுவதும் கலைந்து செல்லவில்லை.

இந்நிலையில், இன்று காலை மருத்துவமனை முன்பு கூடியிருந்த திமுக தொண்டர்களிடம், மருத்துவமனை என்பதால் திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். காவேரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என ஒலி பெருக்கி மூலம் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்