சேவை பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக ஏர்செல் நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக இன்கம்மிங், அவுட் கோயிங் இல்லாமல் ஏர்செல் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாயினர்.
ஏர்செல் நம்பரை பயன்படுத்தி ஆதார், வங்கி, கேஸ் இன்னும் பல முக்கிய சேவைகளுக்கு பயன்படுத்தி வந்ததால் செய்வதறியாது திகைத்து நின்றனர். மேலும் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் பலர், ஏர்செல் நிறுவன அலுவலகங்களை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்தனர். இதனால் பலர் தங்கள் எண்ணை ஏர்செல் நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறினர்.
இந்நிலையில், நேற்று டிராய் அமைப்பின் தலைவர் ராம் சேவக் சர்மா தனியார் தொலைக்காட்சிக்கு அழித்த பேட்டியில், முன்னறிவிப்பு இன்றி வாடிக்கையாளர்களின் சேவையை துண்டித்தது சட்ட விரோதம். வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ஏர்செல் நிறுவனம் சேவையை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வேறு நிறுவனங்களுக்கு மாறிய வாடிக்கையாளர்களின் இருப்புத் தொகையை ஏர்செல் நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்தநிலையில், 3 தினங்களுக்குப் பிறகு தற்போது ஏர்செல் சேவை சீரடைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து, ஆன் செய்தால் வழக்கம் போல் தடையற்ற சேவை கிடைக்கும் எனக் கூறியுள்ளார். அழைப்புகள் வரத்தொடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது.
சேவை பாதிப்பில் இருந்து மீண்டது ஏர்செல்!
சார்ந்த செய்திகள்
Next Story
தொழிலதிபர் சிவசங்கரன் சொத்துகள் முடக்கம்
ஐடிபி வங்கியில் 470 கோடி கடன் பெற்று அதனை திருப்பிச்செலுத்தாமல் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏர்செல் முன்னாள் நிறுவனர், தொழிலதிபர் சிவசங்கரன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து சிவசங்கரன் மீது அமலாக்க இயக்குநரகமும் வழக்கு பதிவு செய்தது. சிவசங்கரன் நிறுவனங்கள் மேலும் 523 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாகவும் சிபிஐயில் வழக்கு உள்ளது.
இந்நிலையில், பணமோசடி புகாரில் தொழிலதிபர் சிவசங்கரனின் 224.6 கோடி சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சென்னையில் எம்.ஆர்.சி.நகர், தி.நகரில் உள்ள சிவசங்கரன் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. முடக்கப்பட்ட சொத்துக்கள் சிவசங்கரனின் சிவா குழும நிறுவனங்களுக்கு சொந்தமானவை. ஆக்செல் சன்ஷைன் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் சிவசங்கரன் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு கூறியுள்ளது.
Next Story
வாடிக்கையாளர் வழக்கு: பதில் அளிக்க ஏர்செல், மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னையை சேர்ந்த சரவணகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் 9 ஆயிரம் டவர்கள் அமைக்கப்பட்டு 25 லட்சம் பேர் ஏர்செல் தொலை தொடர்பு இணைப்பை பயன்படுத்தி வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 6500 டவர்கள் வாடகைபாக்கி காரணமாக செயல்படவில்லை என ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை ஆதிகாரி சங்கர நாராயணன் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பிப்ரவரி 22 முதல் ஏர்செல் இணைப்பில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக, ஏர்செல் இணைப்பை பயன்படுத்த முடியாமல் லட்சக்கணக்காண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 90% வாடிக்கையாளர்களால் ஏர்செல் இணைப்பை பயன்படுத்த முடியவில்லை என்பதால் மத்திய அரசும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் ஏர்செல் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எம்.என்.ப்பி. மூலம் வாடிக்கையாளர்கள் மாறும் வரையிலோ அல்லது முழுமையாகவோ வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஏர்செல் நிறுவனத்தில் ஆதார், மானிய சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளதால், திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் அளவில்லாத சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதால் டிராய் தலையிட்டு ஏர்செல் நிறுவனத்தின் மீது நடடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கோரியிருக்கிறார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து மத்திய தொலைதொடர்பு துறை, டிராய் மற்றும் ஏர்செல் நிறுவனம் ஆகியவை ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
சி.ஜீவா பாரதி