Skip to main content

ஓரங்கட்டப்படும் ஓபிஎஸ் - எடப்பாடிக்கு பாஜக கொடுத்த கிரீன் சிக்னல்

Published on 22/12/2018 | Edited on 22/12/2018
ep

 

சமீப காலமாக ஓபிஎஸ் தொடர்பான விவகாரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிப்படத்தொடங்கியுள்ளன.    இதற்கு ஒரு பின்னணி உண்டு.   ஓபிஎஸ்சை ஓரங்கட்டினால்தான் நல்லது என எடப்பாடி நினைக்கிறார்.     இதற்கு பாஜகவும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது.  

 

 ஒரு காலத்தில்  பாஜகவுடன் எடப்பாடியை விட நெருக்கமாக இருந்த ஓபிஎஸ்சை தற்போது பாஜக கழட்டிவிட்டது.    அவர்கள் கட்டளைப்படி எடப்பாடியும் ஓபிஎஸ்சை ஓரங்கட்ட தொடங்கியுள்ளார்.   அதற்கு எதிர்வினையாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என திரண்ட அதிமுகவினரை ஓபிஎஸ் அணி திரட்ட துவங்கியுள்ளார்.  ஒவ்வொரு கிராமமாக இருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த ஓபிஎஸ் மீதான தாக்குதலை அதிகமாக்கியுள்ளார் எடப்பாடி.    இது அதிமுகவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறது அதிமுக வட்டாரம்.  

 

இறுதியாக, ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டால் அவர் எங்கு செல்வார் என்கிற கேள்விக்கு,  பாஜகவை எதிர்த்து ஓபிஎஸ் கொடி பிடிப்பார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக அலுவலகத்தில் சோதனை: அதிர்ச்சியடைந்த சிபிசிஐடி

Published on 07/09/2022 | Edited on 07/09/2022

 

There is missing silver vel..AIADMK office..CBCID investigation

 

ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி காலை கூடியது. உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த அதே சமயத்தில் ஓபிஎஸ் தரப்பினர், பூட்டப்பட்டு இருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். இந்த விவகாரத்தை அறிந்து தலைமை அலுவலகத்தின் வெளியே இபிஎஸ் தரப்பினரும் கூடினர். இதனால் அங்கு ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினரிடையே மோதல்  வெடித்தது. அதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தை மயிலாப்பூர் வட்டாட்சியர் பூட்டி சீல் வைத்தார். அதன் பிறகு அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உயர்நீதிமன்றம் வழங்கியது.

 

சாவியை பெற்ற இபிஎஸ் தரப்பில் இருந்து சி.வி.சண்முகம் உட்பட சில அதிமுகவினர் தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதன் பின் தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களையும் ஆவணங்களையும் ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச்சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று காலை முதல் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக காலை 8 மணி முதல் 20க்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும், பொதுப்பணி துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் சேதமான பொருட்கள் குறித்தும் காணாமல் போன பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது காணவில்லை என குறிப்பிடப்பட்ட வெள்ளி வேல் அதிமுக அலுவலகத்தில் இருந்ததால் சிபிசிஐடி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

 

மேலும் ஆங்காங்கு சேதம் செய்யப்பட்ட பொருட்களையும் காணாமல் போன ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தடயவியல் நிபுணர்கள் அளிக்கும் அறிக்கை, சிபிசிஐடி அதிகாரிகள் அளிக்கும் அறிக்கை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளிக்கும் அறிக்கை என மூன்றையும் சேர்த்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் நாளை காலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

தீர்ப்பிற்கு பிறகு முதன்முறையாக தலைமை அலுவலகம் செல்லும் இ.பி.எஸ். - கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு

Published on 07/09/2022 | Edited on 07/09/2022

 

Edappadi Palaniswami at AIADMK head office

 

ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி காலை கூடியது. உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த அதே சமயத்தில் ஓபிஎஸ் தரப்பினர், பூட்டப்பட்டு இருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். இந்த விவகாரத்தை அறிந்து தலைமை அலுவலகத்தின் வெளியே இபிஎஸ் தரப்பினரும் கூடினர். இதனால் அங்கு ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினரிடையே மோதல்  வெடித்தது. அதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தை மயிலாப்பூர் வட்டாச்சியர் பூட்டி சீல் வைத்தார். அதன் பிறகு அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உயர்நீதிமன்றம் வழங்கியது.

 

சாவியை பெற்ற இபிஎஸ் தரப்பில் இருந்து சி.வி.சண்முகம் உட்பட சில அதிமுகவினர் தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதன் பின் தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் ஆவணங்களும் ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச்சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நாளை எடப்பாடி பழனிச்சாமி தலைமை அலுவலகத்திற்குச் செல்லப்போவதாக அதிமுக தலைமை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது "அதிமுக கழக இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, 8.9.2022 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில், தலைமைக் கழகம் - எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வந்து, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த உள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.