Skip to main content

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதில் விளங்கும் பின்னணி 

Published on 09/10/2018 | Edited on 09/10/2018
ப்

     

ஆளுநர் பற்றிய அவதூறு என்பது குற்றச்சாட்டு. ஆளுநர் யார்? ஒரு "அரசியல் சட்ட அதிகாரம்". அது மட்டுமின்றி, "ஹிட்டவாடா { மக்கள் ஏடு } " என்ற  நாகபுரியிலிருந்து வெளிவரும் மத்திய இந்தியாவின் ஒரு பிரபல நாளேட்டின் ஆசிரியராக, 2011 ல் பொறுப்பெடுத்தவர் பன்வாரிலால் புரோஹித். 1911  ல் "ஹிட் டவாடா" இதழ்,கோபாலகிருஷ்ண கோகலேவால் நாகபுரியில் தொடங்கப்பட்டது 2011 ல் புரோஹித் நிறுவனம் என்ற நிறுவனத்தால் கையிலெடுக்கப்பட்டது.  அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர்தான் நமது இன்றைய தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இவர் அப்போது பாரதிய ஜனதா கட்சியின் நாகபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2011 ல் இந்த இதழின் நூறாவது ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் தலைமையேற்றவர் அன்றைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டில்.

 

              தொடங்கும்போது, இந்த இதழ் சுதந்திர போராட்ட வீரர் சுஜால் என்பவரால், ஒரு சுதந்திரமான இதழாகத்தான் உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில், நாகபுரியில் இருந்து வெளிவந்த முதல் ஆங்கில ஏடு இதுதான். அதற்குப்பிறகு இந்த இதழுக்கு போட்டியாக "நாகபுரி டைம்ஸ்" என்ற ஏடு வந்தது. அதுவும் பாதியிலேயே "திவாலாகி" நின்று போனது. "ஹிட்டவாடா"இதழ் ,'முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தார்" மூலம், மறைந்த வித்தியா சரண் ஷுக்லா வால் கொண்டுவரப்பட்டது. இப்போது, மத்திய இந்தியாவிலேயே, நாகபுரியிலிருந்தும், ராய்பூரிலிருந்தும் வெளிவருகிற  பிரபல ஆங்கில ஏடாக இருக்கிறது. மத்திய இந்தியாவில் தினசரி இரண்டு லட்சம் பிரதிகளும், நாகபுரி நகரில் மட்டும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பிரதிகளும் விற்பனையாகிறது. ஒரே நேரத்தில், நாகபுரி, ஜபல்பூர், ராய்ப்பூர், போபால் ஆகிய நகரங்களில் இருந்து இந்த ஏடு வெளிவருகிறது. "ஹிட்ட வாடா" ஏட்டின், பிராந்திய மொழி ஏடுகளும் வெளிவருகின்றன. நாகபுரியை தலைநகராகக் கொண்ட பிராந்தியம் " விதர்பா" என அழைக்கப்படுகிறது. அந்த விதர்பா பிராந்தியத்தில், நாகபுரிக்கு வெளியே விற்பனையாகும்," விதர்பா லைன்ஸ்" ஏடும் வெளிவருகிறது. சட்டிஸ்கர் மாநிலத்தில், "சட்டிஸ்கர் லைன்ஸ்" என்ற ஏடு வெளியாகிறது. 

 

ம்


 "மத்தியபிரதேச லைன்ஸ்" என்ற ஏடு, போபாலில், மற்றும் ஜபல்பூரின் சுற்றுப் பகுதிகளிலும் வெளியிடப்படுகிறது. மேற்கண்ட ஏடுகள் அனைத்தும் "ஹிட்டவாடா" குழுவிலிருந்து, வெளியிடப்படுகிறது. இவை தவிர, துணை ஏடுகளாக,திங்கள் கிழமைகளில்," மணி { பணம்}" என்ற ஏடும், செவ்வாய் கிழமைகளில் " பியூச்சர் {எதிர் காலம்}" என்ற ஏடும், புதன் கிழமைகளில், " பெண்கள் உலகம்" என்ற ஏடும், சனிக் கிழமைகளில் " 
 'டிவிங்கில் ஸ்டார் " என்ற ஏடும், ஞாயிற்றுக் கிழமைகளில்," இன்சைட்" என்ற ஏடும், அது தவிர," தி நாலெட்ஜ் { அறிவு } " என்ற துணை ஏடு, குறிப்பாக பள்ளிகளில், குழந்தைகளுக்காக என்று கொண்டுவரப்படுகிறது.  

 

       மேற்கண்ட அனைத்து ஏடுகளையும் வெளியிடும் ஒரு "தாய் நிறுவனம்" இது என்றால், இதன் "ஆசிரியராக" இருந்தவருக்கு எவ்வளவு அறிவும், அனுபவமும், முதிர்ச்சியும், நிதானமும் இருக்கும் என நாம் எண்ணிப்பார்க்க முடிகிறது. அப்படி இந்த நிறுவனத்தின் ஆசிரியராக இருந்தவர்தான், நமது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள். அப்படி இருக்கும்போதும் எப்படி அவர் இந்த முதிர்ந்த வயதிலும், ஒரு கட்டுரை வெளிவந்து சில மாதங்கள் கழித்து, அந்தக் கட்டுரையில் "தன்னைப்" பற்றி செய்தி வந்திருக்கிறது என்று சொல்லி, அதில் தான் வேறுபட்டாலும், அதற்காக, ஒரு பிரபல தமிழ் இதழ் ஆசிரியரை, அதுவும் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு இதழின் வெளியீட்டாளராகவும் இருப்பவரை, இன்னமும் கூறப்போனால், "வாரம் மூன்று இதழாக" வெளிவருகின்ற ஏட்டின் ஆசிரியரை,"இந்திய தண்டனைச் சட்டம் 124  ன்" கீழ் கைது செய்யச் சொல்லி, தனது ஆளுநர் அலுவலகம் மூலம் புகார் கொடுக்க வைக்க முடிகிறது என்றால், இது "நிதானமாக" செயல்படுபவர்களால்,"சாத்தியப்படாத" ஒன்றாகவே, நமக்கெல்லாம்,தெரிகிறது. 

 

ம்

               

விவரம் தெரியாதவர்கள், அனுபவம் இல்லாதவர்கள், அதிகாரத்தில் இருக்கும்போது, எந்த "கட்டளையையும்" இடுவது நாட்டில் நடக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால், அனைத்து அனுபவங்களும் கொண்டவர்கள், இதுபோன்று நடந்து கொள்வது சதாரணமாக எதிர் பார்க்க கூடியது அல்ல. அதேசமயம், மேற்கண்ட சட்டப் பிரிவு, "அரசியல் சட்ட அதிகாரத்தில் உள்ளவர்களை, பலாத்காரமாக  பணி செய்ய விடாமல் தடுப்பது" என்பது எங்கே வந்தது இந்த விஷயத்தில்? என்றே நாடு கேட்கிறது. அதனால், மக்கள் மத்தியில், பொதுத் தளத்தில், "சர்ச்சைக்குள்ளான விஷயத்தில்" யார் மீது கேள்விக்கு கணைகள் எழும் என்பது சொல்லாமலேயே விளங்கக்கூடியது.

 

- டி.எஸ்.எஸ்.மணி

(மூத்த பத்திரிகையாளர்)

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கூச முனுசாமி வீரப்பன்’ - நக்கீரனின் பிரத்யேக வீடியோக்களோடு வீரப்பன் சொல்லும் வீரப்பனின் கதை

Published on 15/12/2023 | Edited on 16/12/2023
Koose Munisamy Veerppan review

தமிழகத்தின் பத்திரிகைத் துறை வரலாற்றில் வேறெந்த பத்திரிகைக்கும், அதன் ஆசிரியருக்கும் நடந்திராத கொடுமைகளையும், சித்திரவதைகளையும், அவஸ்தைகளையும் சந்தித்தது நக்கீரனும் அதன் ஆசிரியரும் தான். ஆனால் நக்கீரன், அனைத்து துன்பங்களையும், துயரங்களையும் தாண்டி சமூகத்தில் நடக்கும் அவலங்களை உடைத்து உண்மையை வெளிக்கொண்டு வர, அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாமல் வேலை செய்து, நீதியை நிலைநாட்ட இன்று வரை தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறது. வீரப்பனை நேரில் சந்தித்து வீடியோ பேட்டி எடுத்ததை, கிட்டத்தட்ட 29 வருடங்களாகக் கட்டிக் காத்ததை, டாக்குமெண்டரியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது ‘கூச முனுசாமி வீரப்பன்’.

இதுவரை வீரப்பனைப் பற்றி வந்த படைப்புகள் அனைத்துமே வீரப்பனைப் பற்றி காவல்துறை சொன்னதும், வீரப்பனைப் பற்றி மற்றவர்கள் சொன்னதுமேயாகும். முதல் முறையாக வீரப்பனைப் பற்றி வீரப்பனே சொன்னதை ஆவணப்படமாகவும், சித்தரிக்கப்பட்ட காட்சிகளோடும் தந்திருக்கிறது. டாக்குமெண்டரி என்றாலே சுவாரசியத்தன்மையற்று இருக்கும், விறுவிறுப்பு இல்லாமல் இருக்கும், ரசிக்கும்படியாக இருக்காது போன்ற காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்த எல்லா அடிப்படைத்தன்மையையும் அடித்து உடைத்து, சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், ரசிக்கும்படியாகவும் தந்திருக்கிறது. மொத்தம் 6 எபிசோடுகளைக் கொண்டுள்ள இந்த டாக்குமெண்டரி சீரிஸ், ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாகப் பலரது பாராட்டுகளோடு பார்க்கப்பட்டு வருகிறது.

மொத்தமுள்ள 6 எபிசோடுகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. வீரப்பனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று வீரப்பனைப் பற்றி தினசரி நாளிதழ்கள் ஏதேதோ எழுதுகிறார்கள். ஏனெனில் வீரப்பனா வந்து கேட்டு விடப்போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறார் நக்கீரன் மூத்த நிருபர் ஜீவா தங்கவேலு. கொலைகாரனை வீரன் என்று சொல்லக்கூடாது, ஆனால் வீரன்தான் என்கிறார் நக்கீரன் ஆசிரியர். வீரப்பன் ஒன்றும் ஹீரோ இல்லை கொலைகாரன் என்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி அலெக்சாண்டர் ஐபிஎஸ். பெயருக்கேற்றார் போல் அவர் வீரப்பன் என்கிறார் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இவ்வாறாக ஒவ்வொருவரின் மாறுபட்ட பார்வையும், அதற்கான அவர்களது விளக்கமும் அப்படியே இந்த டாக்குமெண்டரியில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் வீரப்பனை ஹீரோவாக காட்ட வேண்டும் என்றோ அல்லது வீரப்பனை வில்லனாக காட்ட வேண்டும் என்றோ, எவ்விதமான ஜோடனைகளும் இல்லாமல், வீரப்பன் என்னவாக இருந்தாரோ அதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த டாக்குமெண்டரி ஒரு நேர்மையான படைப்பாகும். வீரப்பனைப் பற்றி நாம் முன்னரே மனதில் வைத்திருந்த எல்லா பிம்பங்களையும் இந்த டாக்குமெண்டரி உடைத்து எரிகிறது. வீரப்பன் நகைச்சுவை உணர்வு மிகுந்தவராக, தீவிரமான கடவுள் பக்தி உள்ளவராக, காட்டின் மூலைமுடுக்கெல்லாம் பயணிப்பதற்குத் தெரிந்து வைத்திருந்தவராக, விலங்குகளின் மொழி புரிந்தவராக, துப்பாக்கி சுடுவதில் வல்லவராக இருந்திருக்கிறார்.

அதே வேளையில் தன்னை காட்டிக்கொடுக்க முனைந்தவர்களை ஈவு இரக்கமற்று கொலை செய்கிற கொலைகாரனாகவும் இருந்திருக்கிறார். கொள்கைக்காக ஓடுகிறவனைப் பணத்துக்காக ஓடுகிறவர்கள் துரத்திப் பிடிக்க முடியாது என்பது பிரபலமான ஒரு வசனம். அதற்கேற்ப தமிழக, கர்நாடக காவல்துறையினரால், இராணுவத்தினரால் காட்டுக்குள் வைத்து இறுதிவரை பிடிக்க முடியாத காட்டின் ராஜாவாக இருந்திருக்கிறார். இதுபோன்ற மாற்றுப் பார்வையை பார்வையாளர்களுக்கு இந்த ஆவணப்படம் தருகிறது.

தன்னைப் பிடிக்க வந்த, துப்பாக்கியோடு சுட வந்த காவல்துறையினரை, அதிரடிப்படையினரை எவ்வாறு சுட்டுச் சண்டையிட்டார் என்று வீரப்பனே ஒரு எபிசோடில் நடித்துக் காண்பிக்கிறார். சினிமாவின் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு இணையாக அவர் ஒளிந்து மறைந்து சுட்ட விதத்தை விவரிப்பது அமைந்துள்ளது. 

வீரப்பனின் மூத்த மகளும், வீரப்பனால் கொல்லப்பட்ட காவலரின் மகளும் டாக்குமெண்டரியில் பேசுகிறார்கள். இரு வேறு விதங்களில் தகப்பனை இழந்தவர்கள் இருவரும், வீரப்பன் மகள் நியாயத்தின் பக்கம் நின்று பக்குவத்தோடு பேசுகிறார். காவலரின் மகள் தனது அப்பாவிற்காக எழுதிய கவிதையை வாசிக்கிறார். கல் நெஞ்சக்காரர்களையும் லேசாகக் கண்ணீர் விடத்தான் வைத்துவிடும். 

வீரப்பனைப் பிடிப்பதற்காகச் சென்ற தமிழ்நாடு - கர்நாடகா இரு மாநில காவல்துறையும் இணைந்து பழங்குடி மக்களிடையே நடத்திய அதிகாரத் திமிர்த்தனத்தையும், ஒர்க்‌ஷாப் என்ற பெயரில் நடத்திய பாலியல் ரீதியிலான கொடூரங்களையும், தாங்க இயலாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அந்த மக்களை ஆட்படுத்தியதையும் நக்கீரன்தான் வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தது. பாதிக்கப்பட்ட மக்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று, நீதிகேட்டு சதாசிவம் கமிசன் முன்பு நிறுத்தியது. இன்றளவும் இந்த கொடூரங்களைத் தாங்கிய மரத்துப் போன மனதோடுதான் அவர்கள் வாழ்கிறார்கள். அப்படியே தான் இந்த டாக்குமெண்டரியில் பேசுகிறார்கள். இன்றளவும் அவர்களுக்கான குறைந்தபட்ச நிவாரணம் கூட கிடைக்காமல் இருப்பதுதான் அதிகார வர்க்கத்தின் பலமாகப் பார்க்கப்படுகிறது.

வீரப்பனுக்கு ஜெயலலிதா, கலைஞர், ரஜினிகாந்த், ராமதாஸ், வைகோ என்ற ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களின் மீதும் ஒரு பார்வையும், விமர்சனமும், கரிசனமும் இருந்திருக்கிறது. அதை அவர் விவரிக்கும் விதமும் நக்கலாகவும் இருக்கிறது. மேலும் இத்தொடரில் மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நக்கீரன் மூத்த நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், திரைக்கலைஞர் ரோகிணி, அரசியல் செயற்பாட்டாளர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனைப் பற்றிய அனுபவங்களையும், பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அவர்களது கருத்துகளைப் பகிர்கின்றனர்.

இந்த டாக்குமெண்டரி சீரீஸ்ஸை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் உடன் இணைந்து எழுதி, சித்தரிப்பு காட்சிகளை ஷரத் ஜோதி திறம்பட இயக்கியுள்ளார். இந்த படைப்பின் தொழில்நுட்ப கலைஞர்களான ஒளிப்பதிவாளர் ராஜ்குமார், வீரப்பன் வாழ்ந்த காட்டிற்குள்ளேயே கேமராவை கொண்டு வந்து பிரம்மாண்டத்தை நிகழ்த்தியுள்ளார். டாக்குமெண்டரியின் புட்டேஜ் பல மணிக்கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும், அதை குறிப்பிட்ட நேர அளவிற்குள் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், சிறப்பாகப் படத்தொகுப்பு செய்திருக்கிறார் ராம் பாண்டியன், இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதன் பின்னணி இசையின் பங்களிப்பு, டாக்குமெண்டரியை சினிமாவைப் போன்று ரசிக்க வைக்கிறது. நடித்த அனைவரும் வீரப்பன் வாழ்ந்த காலத்திலிருந்த பல மனிதர்களைக் கண் முன்னே நிறுத்துகிறார்கள். 

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரின் உருவாக்கத்தில் இந்த டாக்குமெண்டரி உருவாகியிருக்கிறது. இந்த மூவரும் பெரும் நெருக்கடியான நிலையில்தான் இந்த படைப்பில் உழைத்திருக்க வேண்டும். ஏனெனில் எங்கேயும் வீரப்பனை ஹீரோவாகவும் காட்டவில்லை, வில்லனாகவும் காட்டவில்லை, வீரப்பன் என்னவாக இருந்தார் என்பதையும், வீரப்பன் தேடுதல் என்ற பெயரில் நடந்த கொடுமைகளையும், வீரப்பனால் கொல்லப்பட்டவர்களைப் பற்றியும் நேர்மையோடு சொல்லியிருக்கிறார்கள். இந்த நேர்மைதான் இந்த டாக்குமெண்டரியின் உண்மையான வெற்றியாகும்.

Next Story

வீரப்பன் விசயத்தில் நக்கீரன் மூன்று விசயங்களை செய்தது - ஜெயச்சந்திர ஹாஷ்மி

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Koose Munisamy Veerappan   - Jeyachandra Hashmi 

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது படக்குழு. 

கூச முனுசாமி டாக்குமெண்டரி உருவாக்கத்தில் மூவரில் ஒருவராகப் பணியாற்றிய ஜெயச்சந்திர ஹாஷ்மி பேசியதாவது, “வீரப்பனின் மகளையும், வீரப்பனால் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவரின் மகளையும் சந்திக்க வைப்பதாக ஒரு வெர்சன் எழுதி ஜீ5-ல் கொடுத்தோம். அது பிறகு வேறொரு வெர்சனாக மாறியது.

வீரப்பனைப் பற்றி நக்கீரன் மூன்று விசயங்களை செய்தது. அதாவது, வீரப்பன் எப்படி இருப்பார் என்பதை உலகுக்கு சொன்னது; அதோடு வீரப்பனின் சொல்லப்படாத கதைகளை வெளிக்கொண்டு வந்தது. வீரப்பன் செய்த தவறுகளை வெளிக்கொண்டு வந்தது. வீரப்பனின் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அதிகார அத்துமீறல்களை வெளியே சொன்னது” இதையெல்லாம் நேர்மையாக சொல்ல நினைத்தோம். அதுதான் இந்த படைப்பு என்றார்.