Skip to main content

‘வெளி நாட்டுக்கு ஓடினாலும் விடமாட்டோம்!’ -வங்கிக் கொள்ளையர்களைப் பிடிப்பதில் தமிழக காக்கிகள் தீரம்!

Published on 30/03/2018 | Edited on 30/03/2018
police

 

நேபாளம் என்பது இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். அங்கு போய்விட்டால், தமிழக போலீஸாரால் தன்னை நெருங்க முடியாது என்று திட்டமிட்டு நேபாளத்துக்கு ஓடினான் வங்கிக் கொள்ளையன் சபீல் லால் சந்த். அவன் இன்டர்போல் போலீசாரால் நேபாளத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறான். 


கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில், விருகம்பாக்கம் இன்டியன் ஓவர்சீஸ்  வங்கியில் இரண்டு  லாக்கர் கதவுகளை கேஸ் கட்டரால் உடைத்து,  ரூ.32 லட்சம் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்து தலைமறைவானான், அங்கு துப்புரவு பராமரிப்பு தொழிலாளியாக வேலை பார்த்துவந்த சபீல் லால் சந்த். காவல்துறையினரின் விசாரணையில், சபீல் லால் சந்தும் அவனுடைய மகன் திலூவும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் நேபாளத்துக்கு தப்பி ஓடியிருக்கலாம் என்று சந்தேகித்த தமிழ்நாடு காவல்துறை,  தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் கிரி உள்ளிட்ட தனிப்படையினரை அனுப்பியது. அதே நேரத்தில் இன்டர்போல் போலீசாரின் உதவியையும் நாடியது. 
மேலும், சென்னையில் பிடிபட்ட ஹிலாராம் மற்றும் ஹர்பகதூரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, ரமேஷ் என்ற கார் டிரைவரைக் கைது செய்தனர். ரமேஷ் உட்பட 6 பேர் சேர்ந்து வங்கிக்கொள்ளையை நடத்தியதை விசாரணை மூலம் கண்டறிந்தனர்.  

laal


சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் வேண்டுகோளை ஏற்று, பழைய குற்றவாளிகளின் பட்டியலைச் சரிபார்த்த  இன்டர்போல் போலீசாரிடம் சிக்கியிருக்கிறான் சபீல் லால் சந்த். கைதான அவனை சென்னைக்குக் கொண்டு வருகின்றனர். கொள்ளை நடத்திய மீதி நால்வர் இன்னும் பிடிபடாத நிலையில்,  இன்டியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் சிலரையும், தங்களின்  விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர இருக்கிறது தமிழக காவல்துறை.  
வங்கிக் கொள்ளையர்களைப் பிடிப்பதில் தீரத்துடன் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறையைப் பாராட்ட வேண்டும். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; பிரதமர் நிவாரணம்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
A terrible fire at a firecracker factory in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா நகரில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று (06-02-24) திடீரென்று பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது. இந்த தீ விபத்தால், ஆலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின. இந்த பயங்கர விபத்தில் பலரும் சிக்கிப் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், பலமணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். இதனையடுத்து, விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்து தொடர்பாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் பலரும் வேதனை அடைந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
fire incident in a chemical warehouse at chennai

சென்னையை அடுத்துள்ள புழல் - அம்பத்தூர் சாலையில் உள்ள சூரப்பட்டு என்ற இடத்தில் பல்லாவரத்தைச் சேர்ந்த அனந்த ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ரசாயன குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் நள்ளிரவு 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து புழல் காவல் துறையினருக்கும், செங்குன்றம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ளே வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள், உடை மற்றும் வாகன டயர்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாகத்  தீ பற்றி எரிந்து வருகிறது.

இருப்பினும் தீ மளமளவென எரிந்ததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமமாக இருந்ததால் கூடுதலாக அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.