Skip to main content

கலைஞர் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்! 

Published on 07/08/2018 | Edited on 07/08/2018


திமுக தலைவர் கலைஞர் காலமானார். இன்று(7.8.2018) மாலை 6.10 மணியளவில் கலைஞரின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கலைஞரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது தனது டிவிட்டர் பதிவில்,

இந்தியாவின் மிகச்சிறந்த  தலைவர்களில் திமுக தலைவர் கலைஞர் ஒருவர். அவசர நிலைக்கு கலைஞரின் வலுவான எதிர்ப்பு எப்போதும் நினைவு கூறப்படும்.

துயரத்தின் இந்த நேரத்தில் கலைஞரின் குடும்பத்தாருக்கும் கணக்கிலடங்கா ஆதரவாளர்களும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என அதில் அவர் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்