Skip to main content

’காலா’ பட பாடல்கள் அமைதியை சீர்குலைத்தால் சட்டப்படி நடவடிக்கை: ஜெயக்குமார் எச்சரிக்கை!

Published on 09/05/2018 | Edited on 09/05/2018


காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படத்தின் பாடல்கள் இணையதளங்களில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த ’காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும். திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது. காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது.

சார்ந்த செய்திகள்