Skip to main content

ஈரானி கொள்ளையர்கள்!!! -எல்லை தாண்டி சென்று கொள்ளையர்களை பிடித்த தமிழக காவல்துறை

Published on 20/06/2018 | Edited on 21/06/2018

கொள்ளையர்கள் பலவிதமான கொள்ளையர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு வகைதான் ஈரானி கொள்ளையர்கள். சென்னையில் பல செயின் அறுப்பு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  2013ம் ஆண்டுவாக்கில் அவர்கள் பிடிபட்டனர், அதன்பின்பு அவர்களின் நடமாட்டம் இல்லை. 


 

robbers


 

 

 


இந்த நிலையில் கடந்த 2,3 மாதங்களாக அவர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது ஆனால் இது தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. 2 மாதங்களுக்கு முன்பு தி.நகரில் அவர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் இது பதிவாகியுள்ளது. இதைவைத்துதான் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

 

 

நேற்று காலை 6 மணிமுதல் அம்பத்தூர், புழல், மாதவரம் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக 5 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதைத்தொடர்ந்து  வடக்கு இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உடனடியாக வடக்கு பகுதி காவலர்களை எச்சரிக்கை செய்துள்ளார். அப்போது புழல் பகுதியிலிருந்த சிசிடிவி கேமிராவில் இவர்கள் வந்துசென்ற ஒளிப்பதிவு கிடைத்துள்ளது. அந்த வண்டி மஹாராஷ்டிர பதிவெண்ணைக்கொண்டது என்பதையும், அந்த வண்டி ஆந்திரா நோக்கி செல்வதையும் கண்டறிந்தனர். உடனே அந்த சாலையிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிக்கும் காவலர்களை அனுப்பியுள்ளார், அனைத்து காவலர்களையும் கவனமாக இருக்கும்படியும் கூறியுள்ளார் இணை ஆணையர். 

 

 

 

ஆந்திர மாநில எல்லையில் ஒரு குழு அந்த வண்டியை கண்டுபிடித்து தகவல் தெரிவித்துள்ளது. அதற்குள் அந்த வண்டி ஆந்திராவிற்குள் நுழைந்துவிட்டது. பின் ஆந்திர காவலர்களின் உதவியுடன் அந்த கொள்ளையர்களை பிடித்துள்ளனர். இந்த ஒட்டுமொத்த தேடுதல் வேட்டையையும் ஏழு மணிநேரத்திற்குள் வெற்றிகரமாக முடித்துள்ளது தமிழக காவல்துறை. இதற்கு காவல்துறை ஆணையர் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.