Skip to main content

’அடிச்சு கூட கேப்பாங்க... அப்போதும் அரசியல் பேச மாட்டேன்’ - வடிவேலாக மாறிய அமைச்சர் செங்கோட்டையன்

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
sen


பள்ளி கல்வித்துறை அமைச்சரும் அ.தி.மு.க.வின் சீனியருமான கே.ஏ.செங்கோட்டையன் இன்று ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சில பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

 

 அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பல நலத்திட்டங்களை தமிழகத்தில் உருவாக்கி வருகின்றார்கள். அதன்படி  சுற்றுச்சூழல்துறையில் பல  மாற்றங்கள்  உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்குப் பிறகு, பாலிதின் பயன்படுத்துவதில்லை என்ற முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்,  இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாற உள்ளது..பாலிதீன் பயன்படுத்துவதில்லை என்பது ஜனவரி மாதம் முதல் கட்டாயப்படுத்தப்படும். 

 


நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் குப்பைகளைச் சேகரித்து, அதை சுத்தப்படுத்தி, அதிலே இருக்கிற நச்சுத்தன்மைகளைப் போக்கி, சிறப்பான முறையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
பள்ளிக்கல்வித்துறையில்  பல்வேறு மாற்றங்கள் இன்று உருவாகி வருகின்றன. நவம்பர் மாத இறுதிக்குள் 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது. ஒன்றிரிலிருந்து ஐந்து வரை, ஆறிலிருந்து எட்டுவரையிலான வகுப்புவரை சீருடைகளை மாற்றியமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வருகின்ற ஆண்டில் நான்கு சீருடைகளை அரசு மாணவர்களுக்கு வழங்கும். 
ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் கணினி மூலமாக ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பறையும் கணினிமயமாக்கப்படும். இணையதள வசதி செய்து தரப்படும். அதேபோல் யு டியூப் மூலம் பாடத்திட்டங்களைப் புரிந்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக, பணிகள் ஒருவாரம் முன்பு தொடங்கப்பட்டுள்ளது. 

 


ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் சந்தேகம் எதுவாக இருந்தாலும், கேட்டுத் தெரிந்து கொள்ளுமளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்கள் தங்களது செல்போன் மூலம் டவுன்லோடு செய்து விட்டு, வீட்டிலே சென்று படிப்பதற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதற்கட்டமாக இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.   அடல் லேப் எனப்படும் நவீன அறிவியல்  ஆய்வகங்கள் 670 இடங்களில் அமைக்கப்படும். டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, அடுத்த மாத இறுதிக்குள் சைக்கிள் வழங்கப்படும்.

 


மழை காலங்களில் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருவது குறித்து ஆராய்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆங்காங்கே இருக்கும் நிலைகளுக்கு ஏற்ப, மழையின் தன்மைக்கு ஏற்ப, விடுமுறை விடுவதும், பள்ளியைத் திறப்பது குறித்தும் முடிவு எடுப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள். வேறு இடர்பாடுகள் ஏதேனும் ஏற்படும் என்றால் அதனை பள்ளிக்கல்வித்துறை சீரமைக்கும். இந்த மாத இறுதிக்குள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் நியமிக்கப்படுவார்கள்" என்று கூறிய அவரிடம் செய்தியாளர்கள் துறை தகவல்கள் போதும் அரசியலுக்கு வாங்க என்று கூறி,  ‘துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்தார் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளது’ குறித்து கேட்டபோது, அரசியல் கேள்வி வேண்டாமுங்க... என்னைப் பொறுத்தவரை அரசியல் கருத்துகளைச் சொல்வதில்லை என்று முன்பே முடிவெடுத்து விட்டேன் . துணைமுதல்வர் குறித்து நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதிலே சொல்ல முடியாது’ என்றார்.


 
அருகே இருந்த கட்சி நிர்வாகி ஒருவர், வடிவேல் படத்துல ஒரு காட்சி வருமே உங்களுக்கு ஞாபகம் இருக்குதா என்றவர் அந்த காட்சியில் வரும் வசனம் "அடிச்சு கூட கேப்பாங்க அப்ப கூட சொல்லக் கூடாது" என்பது தான்.  அப்படி நீங்க அடிச்சு கேட்டாலும் அண்ணன் வாயிலிருந்து அரசியல் வரவே வராது. மந்திரிச்சு விட்டபொம்மை மாதிரி தூக்கத்துல எழுப்பி கேட்டாலும் , ஸ்மாட் வகுப்பு, சிறப்பு வகுப்புனு தான் பேசுவார். ஏதோ ஒரு பயத்துலயே அண்ணன் செங்கோட்டையன் இயங்கி வருகிறார்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“2024ல் அதிமுக வெற்றி பெறுவதற்கான நிகழ்வாக இது இருக்கும்” - செங்கோட்டையன்

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

“This will be the event for AIADMK to win in 2024” - Sengottaiyan

 

ஈரோடு மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் கலந்து கொண்டபின் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், ““இப்போது முதல்கட்டமாக படிவம் வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இந்த பணிகள் வேகமாக நிறைவேறி வருகிறது. இந்த படிவங்களை பூர்த்தி செய்த பின் அடையாள அட்டைகள் அதிமுக சார்பில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் நிகழ்ச்சியாக உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்வு அமைந்துள்ளது. திருப்புமுனையாக 2024 தேர்தல் அமையும். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை தமிழ் மண்ணில் யாராலும் அசைக்க முடியாது என்ற வரலாற்றை படைக்கும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

 

அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். எந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அங்கிருக்கும் விவசாயிகளும் பராட்டுக்கூட்டத்தை நடத்தினர். அதிமுக பாஜகவிற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப பிரதமரை சந்திப்பார்” எனக் கூறினார்.

 


 

Next Story

2026ல் அண்ணாமலை தலைமையில் பாஜக ஆட்சி? - முன்னாள் அமைச்சர் பதில்

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Annamalai-led BJP rule in 2026? The former minister replied

 

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

 

இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தற்போது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் உள்ள அதிமுகவில் புதிதாக உறுப்பினர் சேர்க்கையை நேற்று மாலை துவக்கி வைத்தேன். ஏனென்றால் புனித வெள்ளியான நேற்று ஒரு நகரச் செயலாளரிடத்தில் படிவங்களைக் கொடுத்து உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தேன்.

 

இன்று அனைத்து ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூராட்சி நகரச் செயலாளர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இனி அதிமுக என்பது தமிழகத்தில் அசைக்க முடியாத ஒன்று என்று இந்த உறுப்பினர் சேர்க்கையில் உருவாக்கிக் காட்டுவோம். 

 

அண்ணாமலை தலைமையில் 2026ல் பாஜக ஆட்சி அமையும் எனச் சொல்கிறார்கள். 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். அதில் எந்த மாற்றங்களும் இல்லை. சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பற்றி உரையாற்றியுள்ளேன். அந்த உரையை உங்களுக்கு வழங்குகிறேன்” எனக் கூறினார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள், “அதிமுகவில் ஒற்றைத் தலைமை எனச் சொல்கிறீர்கள். ஆனால், பிரதமர் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரையும் சந்திக்கிறார்” என கேள்வி எழுப்பியதற்கு, “அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “குறைந்தது ஒரு தொகுதியில் 75 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். குறைந்தது இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பது இலக்கு” என்றார்.