Skip to main content

போர் தொடுப்பது அவ்வளவு எளிதா? 

Published on 17/02/2019 | Edited on 17/02/2019

 

ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் என்று மோடி ஆவேசமாக பேசியிருக்கிறார். இதெல்லாம் மக்களுடைய ஆத்திரத்தை உசுப்பேத்தவும், அரசுக்கு எதிரான கோபத்தை மடைமாற்றவும் மட்டுமே உதவும். நிஜத்தில் 2017 ஆம் ஆண்டு எல்லையோரத்தில் இந்திய வீரர்களை கொன்று உடலை சிதைத்த கொடூரத்துக்கே மோடி அரசு பதிலடி கொடுக்கவில்லை.

 

மிக முக்கியமான ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. காஷ்மீரில் எப்போதுமில்லாத வெற்றியை 2014ல் பாஜகவுக்கு கொடுத்தார்கள். அங்கு கூட்டணி அரசு அமைத்தது பாஜக. அதன்பிறகு என்ன நடந்தது? அப்புறம்தான் காஷ்மீர் படுமோசமான வன்முறைக் களமாக மாறியிருக்கிறது.

 

ay

 

இஸ்லாமிய இளைஞர்களை பாரபட்சமின்றி காவல் நிலையத்துக்கு அழைத்துப்போய் தீவிரவாத முத்திரை குத்தும் முயற்சி தீவிரமடைந்தது. இதை கண்டித்த போராட்டங்களில் பங்கேற்ற மக்கள் மீது பெல்லட் குண்டுத் தாக்குதலை தொடுத்து சிறு குழந்தைகள்கூட பாதிக்கப்பட்டனர்.

 

அதைத்தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்புப் படையினர் மீது கல்லூரி மாணவிகளும், பள்ளி மாணவிகளுமே தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்தது. பாஜகவின் நோக்கம் காஷ்மீர் மாநில மக்களின் நம்பிக்கையை வளர்த்து, அவர்களை இந்தியாவோடு இணக்கமாக வைத்திருப்பது அல்ல என்றே மக்கள் கருத தொடங்கிவிட்டார்கள்.

 

மிகக்குறிப்பாக, பாகிஸ்தான் வசம் இருக்கிற காஷ்மீர் பகுதிக்கு, இங்கிருக்கிற முஸ்லிம்களை அனுப்புவதே பாஜகவின் நோக்கம் என்று வெளிப்படையாகவே மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஜம்மு காஷ்மீரில் இருந்து முஸ்லிம்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு விரட்டிவிட்டு, அவர்களுடைய சொத்து சுகங்களை காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு கொடுப்பதே பாஜகவின் இலக்கு என்று கருதும் அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினர் மற்றும் பாஜகவினரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

 

மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றபிறகுதான் காஷ்மீரில் மிகக்குறைவான வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கிறது. காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவில் எல்லையோர உயிர்ப்பலிகள் அதிகரித்துள்ளன. மோடி பொறுப்பேற்ற பிறகு கடந்த நாலேமுக்கால் ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தினர் எல்லைப் பகுதிகளில் கொல்லப்பட்டுள்ளனர்.

 

அப்போதெல்லாம் மோடி இப்படி ஆவேசமாக பேசியதில்லை. பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால், ஆட்சி முடியப்போகிற நிலையில் வழக்கத்திற்கு மாறான இந்திய வீரர்களின் அணிவகுப்பை எல்லைப் பகுதியில் நடத்தி, 42 வீரர்களின் இன்னுயிரை பறித்திருக்கிறது மத்திய அரசு.

 

பயங்கரவாத தாக்குதலில் பலியான சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களை ஒரே சமயத்தில் 70 வாகனங்களில் அணிவகுக்கச் செய்தது ஏன் என்று வினா எழுப்பியிருக்கிறார். இதுவரை இப்படி அணிவகுக்கச் செய்தது இல்லை என்றும் இதில் சதி இருப்பதாகவும் அவர் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்.

 

அதைக்காட்டிலும் பாதுகாப்பு செயற்கைக் கோள்கள் இத்தனை இருந்தும் இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை குறிப்பிட்டிருக்கிறார். தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே, உளவுத்துறை சார்பில் மாநில அரசுக்கும் ராணுவத்துக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. வெடிமருந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், ராணுவ அணிவகுப்பு நடைபெறும் பகுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தி பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

ay

 

தாக்குதல் நடத்தப்போவதை சம்பந்தப்பட்ட ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பும் சூசகமாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இத்தனைக்கும் பிறகு இப்படி ஒரு மோசமான தாக்குதலை அனுமதித்தது யார் என்ற கேள்வி இயல்பாகவே மக்கள் மத்தியில் எழும் என்பதை மோடி திசை திருப்பப்பார்க்கிறார்.

 

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று தேர்தல் நேரத்தில் பாஜகவினர் கிளப்பி விடுகிறார்கள். அவர்கள் எந்தக் காலத்தில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. உலக அளவில் போர்களை தவிர்க்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில் இவர்களுடைய நோக்கம், வெற்று வெறியை உருவாக்கி தேர்தலில் அதை பயன்படுத்துவதே. உண்மையில் போர் தொடுத்தால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பதையெல்லாம் மறந்து பேசுகிறவர்களின் அறியாமையை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும்.

 

இரண்டு நாடுகளுமே அணு ஆயுதங்களை அதிக அளவில் வைத்திருக்கின்றன. இந்தியாவைக் காட்டிலும் பாகிஸ்தானிடம் அதிகமாக இருக்கின்றன. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படக்கூடிய நாடுகளும் அதிகம் என்ற நடைமுறை உண்மைகளையெல்லாம் அறியாமல் பேசுகிறார்களா? அறிந்தாலும் இப்போதைக்கு மோடி அரசின் தோல்வியை மடைமாற்றும் நோக்கத்தில் வெறியேற்றி பேசுகிறார்களா என்பதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்.

 

பாகிஸ்தானுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் மட்டுமே வெறுப்புணர்வை வளர்த்து, அந்த வெறுப்புணர்வையே தனக்கு வாக்குகளாக மாற்றுவதுதான் பாஜகவின் ஒரே தந்திரம். பாஜகவைத் தவிர இந்தியர்களில் பெரும்பான்மையோர் பாகிஸ்தானை சகோதர நாடாக பாவித்து, ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறார்கள். பூமியின் சொர்க்கம் என்ற பெருமையை ஜம்மு காஷ்மீர் மீண்டும் பெறவேண்டும் என்பதே பெரும்பான்மை இந்தியரின் விருப்பம். பாஜகவின் நோக்கத்தை புரிந்துகொண்டு, இந்து மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகளை வேரறுத்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடிப்படைத் தன்மையை காப்போம் என்று சூளுரைப்பதே இந்தியர்களின் கடமை.

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது '2024 தேர்தல் திருவிழா'- தேதிகள் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'2024 Election Festival' begins- dates announced

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதே நேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதி பற்றி முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (16/03/2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாற்றுகையில், ''மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது. 2024-ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 986.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட 6 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.50 கோடி பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நூறு வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆள்பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக உள்ளது. நான்கு பலத்தை கட்டுப்படுத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்பலத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதை தடுக்க தேவையான அளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். 50% வாக்கு சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். எல்லைகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.பொய்ச் செய்திகளை உருவாக்கி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.