Skip to main content

6 காங். எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யவைக்க பா.ஜ.க. திட்டம்!

Published on 16/05/2018 | Edited on 16/05/2018

கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால், காங்கிரஸும், மதசார்பற்ற ஜனதாதளமும் எந்த வகையிலும் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க விடமாட்டோம் என்று உறுதியாக கூறியிருக்கின்றன.

 

bjp

 

இந்நிலையில், எடியூரப்பாவை சந்தித்து கோரிக்கை மனுவை வாங்கிய ஆளுநர் காங்கிரஸ், ம.ஜ.த. குழுவைச் சந்திக்க நேரம் ஒதுக்காமல் இழுத்தடித்தார். மோடியின் விசுவாசி என்று விமர்சிக்கப்படுகிற ஆளுநர் வஜுபாய் வாலா பா.ஜ.க.வின் குதிரை பேரத்திற்கு அப்பட்டமாக துணைபோவது ஜனநாயகப் படுகொலை என்று காங்கிரஸ் கூறியது. ஆளுநர் அனுமதி மறுத்தால் தர்ணாவில் ஈடுபடப்போவதாக இரண்டு கட்சிகளும் எச்சரித்தன. அதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு நேரம் ஒதுக்கினார் ஆளுநர்.

 

இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 12 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை என்று வெளியான தகவல் தவறு என்றும், அவர்கள் தங்களுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள் என்றும் முதல்வர் சித்தராமய்யா கூறினார்.

 

இரண்டு கட்சிகளும் தங்கள் நிலையில் உறுதியாக உள்ளதால், பா.ஜ.க. புதிதாக ஒரு சதித்திட்டத்தை தீட்டியிருப்பதாக கர்நாடகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, பெல்லாரி பகுதியில் செல்வாக்கான ரெட்டி சகோதரர்கள் மூலமாக அந்தப் பகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற 6 எம்எல்ஏக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, அவர்களை ராஜினாமா செய்யச் சொல்வது என்று முடிவெடுத்து இருக்கிறார்களாம். அப்படி ராஜினாமா செய்யும் பட்சத்தில் இருக்கிற உறுப்பினர்களில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றுவிடும் என்று திட்டமிடுகிறார்களாம்.

 

பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால், அதன்பிறகு அந்த ஆறுபேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்களாம். இப்படி ஒரு தகவல் பரவிய நிலையில், அப்படி யாரும் பதவிவிலக மாட்டார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.