Skip to main content

பில்ராத் மருத்துவமனை சார்பில் நடந்த மை கேர்ள், மை பிரைட் குழு விவாதம்

Published on 16/08/2018 | Edited on 16/08/2018

பில்ராத் (billroth) மருத்துவமனை சார்பில் எழும்பூரில் உள்ள 'ராடிசன்' ஹோட்டலில் 'மை கேர்ள்  மை பிரைட்' (My Girl, My Pride) கருத்தரங்கம் ஆகஸ்ட் 14 மாலை  4 அளவில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகையும் இயக்குனருமான ஸ்ரீபிரியா, திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனருமான அறிவழகன் வெங்கடாசலம், ஃபென்சிங் விளையாட்டில் உலகளவில் 50 இடத்திற்குள் இருக்கும் பவானி தேவி, பில்ரோத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ வல்லுநரான டாக்டர். வி. ரஜினி, நேட்சுரல்ஸ் ஸ்பா மற்றும் சலூனின் தலைமை அதிகாரி சி.கே. குமரவேல் ஆகியோர் பங்கேற்று விவாதித்தனர். இந்த நிகழ்வை  'தி நியூஸ் மினிட்' துணை ஆசிரியர் ஆனா ஐசக் ஒருங்கிணைத்தார்.

 


 

billroth



 

 


இதில் பேசிய நேட்சுரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சி.கே. குமாரவேல், என்னிடம் சில இல்லத்தரசிகள் கூறுவார்கள் நாங்கள் எப்படி தனியாக சமாளிப்பது, கணவன் அல்லது அப்பாவின் உதவிகள் இல்லாமல் எங்களால் சமாளிக்க முடியவில்லை என்று, அதற்கு நான் கூறினேன், போதும் இதுவரை அவர்களின் உதவிகளை நாடியது, நீங்கள் உங்களின் சொந்தக்கால்களில் நில்லுங்கள் என்று. நான் இப்போது பல “இல்லத்து கணவர்களை” உருவாக்கியுள்ளேன். ஏனென்றால் தற்போது பல பெண்கள் சுயதொழில் செய்கின்றனர், சுயமாக நிறைய வருமானம் ஈட்டுகிறார்கள். இதனால் கணவன்மார்கள் அவர்கள் மீது பொறாமை கொள்கின்றனர். என்று கூறினார்.



திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனருமான அறிவழகன் வெங்கடாசலம்  பேசுகையில், வீட்டில் பெற்றோர்களே ஆண்பிள்ளைகள் இப்படித்தான் இருக்கவேண்டும், பெண்பிள்ளைகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். எடுத்துக்காட்டிற்கு பாத்திரம் கழுவுவதில் ஆரம்பிக்கிறது இந்த சிக்கல், ஆண் பிள்ளையை பாத்திரம் கழுவ விடுவதில்லை, பெண் பிள்ளையை கண்டிப்பாக கழுவ வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள், ஆண் இப்படிதான் இருக்கவேண்டும், பெண் இப்படிதான் இருக்கவேண்டுமென குழந்தைகளுக்கு தவறாக கற்பிக்கப்படுகிறது. என கூறினார்.

 

 


நடிகையும் இயக்குனருமான ஸ்ரீபிரியா கூறியது. ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் ஒரே மாதிரியாக வளர்க்க வேண்டும். பையனுக்கு இரண்டு இட்லி அதிகமாக வை அவன் ஆம்பள பையன் இந்த கதையெல்லாம் இனிமேல் சொல்லாதிங்க  பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி. இரண்டு குழந்தைகளையும் சமமாக வளருங்கள். எங்களின் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கவே நாங்கள் போராடுகிறோம். 


டாக்டர். வி. ரஜினி,  குழந்தைகளுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை சொல்லிக்கொடுங்கள், அப்போதுதான் அவர்கள் ஒரு செயலை செய்யுமுன் இது மற்றவர்களை காயப்படுத்துமா என்பதை சிந்திப்பார்கள்... பாதுகாப்பான வழிமுறைகளை கற்பியுங்கள். என கூறினார்.
 
 

billroth




ஃபென்சிங் விளையாட்டு வீராங்கனை பவானி தேவி கூறியது, உங்களுக்கு தெரியவேண்டும், என்ன தேவை என்பதை குறித்து நான் உறுதியாக நம்புகிறேன், விளையாட்டு உங்களின் மன உறுதி, சுயசிந்தனை, சுயமரியாதை ஆகியவற்றை அதிகரிகரிக்கும். உங்களுக்கு எது சரியென தோன்றுகிறதோ அதை நோக்கி நகருங்கள், ஒருவேளை அது தவறாக இருந்தால் பின் சரிசெய்து கொள்ளலாம். ஆனால் அதை நோக்கிய முயற்சிகளை எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு, முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு தொடக்கத்திலிருந்து கற்பிக்கவேண்டும். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.