Skip to main content

பாரதிராஜா, சீமான் ‘கும்பலுக்கு’ ரஜினி மன்றம் கண்டனம்!

Published on 18/04/2018 | Edited on 18/04/2018
rajini f

காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்தியில் ஆளும் மோடி அரசு, தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் மக்களிடம் உருவாக்கியுள்ளது. எதிர்கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் செய்து வருகின்றன.

ஐ.பி.எல் போட்டி சென்னையில் நடைபெறுவதை நிறுத்த வேண்டும் என தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதையும் மீறி ஐ.பி.எல் போட்டி நடந்தது. இதனை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் இயக்குநர் பாரதிராஜா, அமீர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி சீமான் போன்றோர் போராடினர். அப்போது போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி போலீஸார் கைது செய்தனர்.

இந்த பிரச்சனையில், காவலர்களை தாக்கியவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த், டுவிட்டரில் கருத்து வெளியிட்டார். இது தமிழ் உணர்வாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.  இதனால் ரஜினியை, இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், சீமான், வேல்முருகன் போன்றவர்கள் கண்டித்து பேசிவருகின்றனர்.

rajini fans statement



இந்த நிலையில் தான் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் அசாதாரண கூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில் எங்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களை பற்றி விமர்சிப்பவர்களுக்கு, காவிரி பிரச்சனை என்பது இன்றைய நேற்றைய பிரச்சனையல்ல. பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்சனை இது. மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் இதற்கான தீர்வு இன்றும் தீர்க்கப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றம், காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. இது ஒரு மாநிலத்திற்கு சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு சம்மந்தப்பட்ட பிரச்சனை. இதற்கு மத்திய அரசும், இந்த நான்கு மாநில அரசுகளும் ஒன்று சேர்ந்து பேசி தீர்வுகாண வேண்டிய பிரச்சனை இது. இதில் ஒரு நடிகராகவோ, தனிப்பட்ட மனிதராகவோ ரஜினிகாந்த் அவர்களால் தீர்வு காண முடியாது என்பது தெரிந்தும் அவர்களின் மீது தேவையற்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு பிரச்சனைகள் வரும்போதெல்லாம் தலைவர் ஒரு தனிமனிதனாக தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து தன் கருத்தை பதிவு செய்தும் வருகிறார். இந்நிலையில் நாட்டில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்திற்கும் ரஜினி என்ன செய்துவிட்டார்? ரஜினி என்ன செய்துவிட்டார் என்று பேசுபவர்களுக்கு ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறோம். நாம் மாநிலத்தை ஆளும் அரசை கேட்பதை விட்டுவிட்டு தமிழகத்தில் ஒரு சில கும்பல் ரஜினிகாந்த் அவர்களை மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய்வது எந்த விதத்திலும் நியாயமில்லை. தயவு செய்து இப்படியெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் நாட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் சட்ட ரீதியாகவோ, அரசு ரீதியாகவோ அனைவரும் கலந்து பேசி தீர்வுகாண வேண்டியது மிக முக்கியம். இதை தவிர்த்து சிலர் தன் சுயநலத்திற்காக, தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள, விளம்பரப்படுத்திக்கொள்ள முயலுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்க கூடாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என வேலூர் மாவட்ட தலைமை ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சோளிங்கர் ரவி, மாவட்ட இணை செயலாளர் நீதி என்கிற அருணாச்சலம் இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்